| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | திருவாய்மொழி - தனியன் || (பக்தாம்ருதம்) 40 | பக்தாம்ருதம் விச்வ ஜநாநு மோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம் ஸஹஸ்ர ஸாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம் | Bhaktha amrutham, பக்த அம்ருதம் - தொண்டர்கட்கு அமுதமா யிருப்பதும் Vishwa jana anumodhanam, விச்வ ஜந அநுமோதநம் - ஸகல ஜனங்களையும் ஆனந்திக்கச் செய்வதும் Sarva arthatham, ஸர்வ அர்த்ததம் - ஸமஸ்த புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும் Sahasra saaga Upanishad samagamam, ஸஹஸ்ர சாக உபநிஷத் ஸமாகமம் - ஆயிரக்கணக்கான சாகைகளையுடைய உபநிஷத்துக்களின் திரட்சியாயிருப்பதும் Sri Sadagopa vaangmayam, ஸ்ரீ சடகோப வாங்மயம் - நம்மாழ்வாருடைய ஸ்ரீஸுக்தி மயமுமான Draavida vedha saagaram, த்ராவிட வேத ஸாகரம் - தமிழ் வேதக் கடலை Aham, அஹம் - அடியேன் Namami, நமாமி - ஸேவிக்கிறேன் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (திருவழுதி நாடென்றும்) 41 | திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும் மருவினிய வண் பொருநலென்றும் - அருமறைகள் அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து | Nenje, நெஞ்சே - மனமே! Thiru vazhuthi naadu endrum, திரு வழுதி நாடு என்றும் - திருவழுதி நாடென்கிற தேசத்தை அநுஸந்தித்தும் Then kurugoor endrum, தென் குருகூர் என்றும் - அழகிய திருக்குருகூரென்கிற திவ்யதேசத்தை அநுஸந்தித்தும் Maruva iniya van porunal endrum, மருவ இனிய வண் பொருநல் என்றும் - ஆசைப்படும்படி போக்யமாய் அழகியதான தாமிரபர்ணியாற்றை அநுஸந்தித்தும் Aru maraigal, அரு மறைகள் - அருமையான வேதங்களை Anthadhi seidhan, அந்தாதி செய்தான் - அந்தாதித் தொடையான திருவாய்மொழி முகத்தாலே பாடின ஆழ்வாருடைய Adi inaiye, அடி இணையே - உபய பாதங்களையே epozhudhum, எப்பொழுதும் - இடைவிடாமல் Thelinthu, தெளிந்து - தெளிவுடனே Sindhiyaai, சிந்தியாய் - சிந்தை செய்யக்கடவை |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (மனத்தாலும் வாயாலும்) 42 | மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரையல்லா திறைஞ்சேன் - தனத்தாலும் ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று | Manathalum, மனத்தாலும் - நெஞ்சினாலும் Vayalum, வாயாலும் - வாக்கினாலும் Van kurugoor penum, வண் குருகூர் பேணும் - திருநகரியை ஆதரிக்கின்ற Inathaarai allaadhu, இனத்தாரை அல்லாது - கோஷ்டியில் சேர்ந்தவர்களைத் தவிர (மற்றையோர்களை) Irainjen, இறைஞ்சேன் - வணங்கமாட்டேன் Dhanathalum, தனத்தாலும் - செல்வத்தினாலும் Yedhum kuraivu ilen, ஏதும் குறைவு இலேன் - எவ்விதமான குறையுமுடையேனல்லேன் (எதனாலென்னில்) Endhai Sadagopan, எந்தை சடகோபன் - அஸ்மத் ஸ்வாமியான நம்மாழ்வாருடைய Paadhangal, பாதங்கள் - திருவடிகள் Yaamudaiya, யாமுடைய - நம்முடைய Patru, பற்று - ஆதாரமாயிராநின்றது |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (ஏய்ந்த பெருங் கீர்த்தி) 43 | ஏய்ந்த பெருங் கீர்த்தி யிராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராதவுள்ளம் பெற. | Aayndha, ஆய்ந்த - குற்றங் கலசாதம் Peru seer, பெரு சீர் - சிறந்த திருக்குணங்களினால் Aar, ஆர் - பரிபூர்ணரான Sadagopan, சடகோபன் - நம்மாழ்வார் (அருளிச் செய்த) Senthamizh vedham, செந்தமிழ் வேதம் - செவ்விய தமிழ் வேதத்தை Tharikkum, தரிக்கும் - தாங்கிக்கொள்ளவல்லதாய் Peradha, பேராத - வேறொன்றில் செல்லமாட்டாததான Ullam, உள்ளம் - நெஞ்சை Pera, பெற - பெறும் பொருட்டு Eayndha peru keerthi Ramanusa muni than, ஏய்ந்த பெரு கீர்த்தி இராமாநுச முனி தன் - தகுதியான பெரும்புகழையுடைய எம்பெருமானது Vaayndha padham malar, வாய்ந்த பாதம் மலர் - பொருத்தமான திருவடித் தாமரைகளை Vanangugindren, வணங்குகின்றேன் - வணங்குகின்றேன் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (வான் திகழும்) 44 | வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமாநுசன் | Vaan thigazhum Solai, வான் திகழும் சோலை - ஆகாசத்தளவும் ஒங்கி விளங்குகின்ற சோலைகளையும் Madil, மதிள் - ஸப்த ப்ராகாரங்களையும் உடைத்தான Arangar, அரங்கர் - திருவரங்கத்தில் பள்ளி கொண்ட எம்பெருமானுடைய Van pugazh mel aandra, வண் புகழ் மேல் ஆன்ற - திருக்கல்யாண குண விஷயமாக அமைந்த Tamizh maraigal aayiramum, தமிழ் மறைகள் ஆயிரமும் - தமிழ் வேதமான ஆயிரம் பாசுரங்களையும் Eendra mudhal thai, ஈன்ற முதல் தாய் - பெற்ற முக்கியமான மாதா Sadagopan, சடகோபன் - நம்மாழ்வாராவர் Moimpaal, மொய்ம்பால் - மிடுக்குடனே Valartha, வளர்த்த - அதனை வளர்த்த Idham thai, இதம் தாய் - ஹிதமான மாதா Ramanusan, இராமாநுசன் - எம்பெருமானாராவர் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (மிக்க விறை) 45 | மிக்க விறை நிலையும் மெய்யாமுயிர் நிலையும் தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும் ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன் யாழினிசை வேதத் தியல் | Kurugaiyar kon, குருகையர் கோன் - திருநகரியிலுள்ளார்க்குத் தலைவரான ஆழ்வார் (அருளிச்செய்த) Yaazhin isai vedhathu iyal, யாழின் இசை வேதத்து இயல் - வீணாகானம்போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் Mikka irai nilaiyum, மிக்க இறை நிலையும் - ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானுடைய ஸ்வரூபத்தையும் Meyaam uyir nilaiyum, மெய்யாம் உயிர் நிலையும் - நித்யனான ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் Thakka neriyum, தக்க நெறியும் - ஸ்வரூபாநுரூபமான உபாயத்தின் ஸ்வரூபத்தையும் Thadai aagi thokku iyalum oozh vinaiyum, தடை ஆகி தொக்கு இயலும் ஊழ் வினையும் - (பகவத்ப்ராப்திக்குப்) பிரதிபந்தகமாகிச் சேர்ந்து கிடக்கிற முன்னை வினைகளாகிற விரோதி ஸ்வரூபத்தையும் Vaazh vinaiyum, வாழ்வினையும் - வாழ்வாகிற பரம புருஷார்த்த ஸ்வரூபத்தையும் Oodhum, ஓதும் - கூறுவன |