Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: திருவாய்மொழி (6 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0திருவாய்மொழி - தனியன் || (பக்தாம்ருதம்) 40
பக்தாம்ருதம் விச்வ ஜநாநு மோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்
ஸஹஸ்ர ஸாகோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம்
Bhaktha amrutham, பக்த அம்ருதம் - தொண்டர்கட்கு அமுதமா யிருப்பதும்
Vishwa jana anumodhanam, விச்வ ஜந அநுமோதநம் - ஸகல ஜனங்களையும் ஆனந்திக்கச் செய்வதும்
Sarva arthatham, ஸர்வ அர்த்ததம் - ஸமஸ்த புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும்
Sahasra saaga Upanishad samagamam, ஸஹஸ்ர சாக உபநிஷத் ஸமாகமம் - ஆயிரக்கணக்கான சாகைகளையுடைய உபநிஷத்துக்களின் திரட்சியாயிருப்பதும்
Sri Sadagopa vaangmayam, ஸ்ரீ சடகோப வாங்மயம் - நம்மாழ்வாருடைய ஸ்ரீஸுக்தி மயமுமான
Draavida vedha saagaram, த்ராவிட வேத ஸாகரம் - தமிழ் வேதக் கடலை
Aham, அஹம் - அடியேன்
Namami, நமாமி - ஸேவிக்கிறேன்
0திருவாய்மொழி - தனியன் || (திருவழுதி நாடென்றும்) 41
திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினிய வண் பொருநலென்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
Nenje, நெஞ்சே - மனமே!
Thiru vazhuthi naadu endrum, திரு வழுதி நாடு என்றும் - திருவழுதி நாடென்கிற தேசத்தை அநுஸந்தித்தும்
Then kurugoor endrum, தென் குருகூர் என்றும் - அழகிய திருக்குருகூரென்கிற திவ்யதேசத்தை அநுஸந்தித்தும்
Maruva iniya van porunal endrum, மருவ இனிய வண் பொருநல் என்றும் - ஆசைப்படும்படி போக்யமாய் அழகியதான தாமிரபர்ணியாற்றை அநுஸந்தித்தும்
Aru maraigal, அரு மறைகள் - அருமையான வேதங்களை
Anthadhi seidhan, அந்தாதி செய்தான் - அந்தாதித் தொடையான திருவாய்மொழி முகத்தாலே பாடின ஆழ்வாருடைய
Adi inaiye, அடி இணையே - உபய பாதங்களையே
epozhudhum, எப்பொழுதும் - இடைவிடாமல்
Thelinthu, தெளிந்து - தெளிவுடனே
Sindhiyaai, சிந்தியாய் - சிந்தை செய்யக்கடவை
0திருவாய்மொழி - தனியன் || (மனத்தாலும் வாயாலும்) 42
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்
இனத்தாரையல்லா திறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று
Manathalum, மனத்தாலும் - நெஞ்சினாலும்
Vayalum, வாயாலும் - வாக்கினாலும்
Van kurugoor penum, வண் குருகூர் பேணும் - திருநகரியை ஆதரிக்கின்ற
Inathaarai allaadhu, இனத்தாரை அல்லாது - கோஷ்டியில் சேர்ந்தவர்களைத் தவிர (மற்றையோர்களை)
Irainjen, இறைஞ்சேன் - வணங்கமாட்டேன்
Dhanathalum, தனத்தாலும் - செல்வத்தினாலும்
Yedhum kuraivu ilen, ஏதும் குறைவு இலேன் - எவ்விதமான குறையுமுடையேனல்லேன் (எதனாலென்னில்)
Endhai Sadagopan, எந்தை சடகோபன் - அஸ்மத் ஸ்வாமியான நம்மாழ்வாருடைய
Paadhangal, பாதங்கள் - திருவடிகள்
Yaamudaiya, யாமுடைய - நம்முடைய
Patru, பற்று - ஆதாரமாயிராநின்றது
0திருவாய்மொழி - தனியன் || (ஏய்ந்த பெருங் கீர்த்தி) 43
ஏய்ந்த பெருங் கீர்த்தி யிராமானுச முனி தன்
வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்த
பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராதவுள்ளம் பெற.
Aayndha, ஆய்ந்த - குற்றங் கலசாதம்
Peru seer, பெரு சீர் - சிறந்த திருக்குணங்களினால்
Aar, ஆர் - பரிபூர்ணரான
Sadagopan, சடகோபன் - நம்மாழ்வார் (அருளிச் செய்த)
Senthamizh vedham, செந்தமிழ் வேதம் - செவ்விய தமிழ் வேதத்தை
Tharikkum, தரிக்கும் - தாங்கிக்கொள்ளவல்லதாய்
Peradha, பேராத - வேறொன்றில் செல்லமாட்டாததான
Ullam, உள்ளம் - நெஞ்சை
Pera, பெற - பெறும் பொருட்டு
Eayndha peru keerthi Ramanusa muni than, ஏய்ந்த பெரு கீர்த்தி இராமாநுச முனி தன் - தகுதியான பெரும்புகழையுடைய எம்பெருமானது
Vaayndha padham malar, வாய்ந்த பாதம் மலர் - பொருத்தமான திருவடித் தாமரைகளை
Vanangugindren, வணங்குகின்றேன் - வணங்குகின்றேன்
0திருவாய்மொழி - தனியன் || (வான் திகழும்) 44
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ்மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமாநுசன்
Vaan thigazhum Solai, வான் திகழும் சோலை - ஆகாசத்தளவும் ஒங்கி விளங்குகின்ற சோலைகளையும்
Madil, மதிள் - ஸப்த ப்ராகாரங்களையும் உடைத்தான
Arangar, அரங்கர் - திருவரங்கத்தில் பள்ளி கொண்ட எம்பெருமானுடைய
Van pugazh mel aandra, வண் புகழ் மேல் ஆன்ற - திருக்கல்யாண குண விஷயமாக அமைந்த
Tamizh maraigal aayiramum, தமிழ் மறைகள் ஆயிரமும் - தமிழ் வேதமான ஆயிரம் பாசுரங்களையும்
Eendra mudhal thai, ஈன்ற முதல் தாய் - பெற்ற முக்கியமான மாதா
Sadagopan, சடகோபன் - நம்மாழ்வாராவர்
Moimpaal, மொய்ம்பால் - மிடுக்குடனே
Valartha, வளர்த்த - அதனை வளர்த்த
Idham thai, இதம் தாய் - ஹிதமான மாதா
Ramanusan, இராமாநுசன் - எம்பெருமானாராவர்
0திருவாய்மொழி - தனியன் || (மிக்க விறை) 45
மிக்க விறை நிலையும் மெய்யாமுயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத் தியல்
Kurugaiyar kon, குருகையர் கோன் - திருநகரியிலுள்ளார்க்குத் தலைவரான ஆழ்வார் (அருளிச்செய்த)
Yaazhin isai vedhathu iyal, யாழின் இசை வேதத்து இயல் - வீணாகானம்போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள்
Mikka irai nilaiyum, மிக்க இறை நிலையும் - ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானுடைய ஸ்வரூபத்தையும்
Meyaam uyir nilaiyum, மெய்யாம் உயிர் நிலையும் - நித்யனான ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்
Thakka neriyum, தக்க நெறியும் - ஸ்வரூபாநுரூபமான உபாயத்தின் ஸ்வரூபத்தையும்
Thadai aagi thokku iyalum oozh vinaiyum, தடை ஆகி தொக்கு இயலும் ஊழ் வினையும் - (பகவத்ப்ராப்திக்குப்) பிரதிபந்தகமாகிச் சேர்ந்து கிடக்கிற முன்னை வினைகளாகிற விரோதி ஸ்வரூபத்தையும்
Vaazh vinaiyum, வாழ்வினையும் - வாழ்வாகிற பரம புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
Oodhum, ஓதும் - கூறுவன