| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் || 38 | १. अविदितविषयान्तरः शठारेरुपनिषदामुपगानमात्रभोगः । अपि च गुणवशात्तदेकशेषी मधुरकविहृदये ममाविरस्तु ॥ 1. அவிதிதவிஷயாந்தரச்டாரே ருபநிஷதாமுயகாநமாத்ரபோக : | அபிச குணவமாத்ததேகஜீே மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து || | அவிதிதவிஷயாந்தர: , Avithithavishayandhara - நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தையுமறியாதவரும் சடாரே: , Chadare - நம்மாழ்வாருடைய (திவ்ய ஸூக்திகளாகிய) உபநிஷதாம் , Upanishatham - திவ்யப்ரபந்தங்களை உபகாநமாத்ர போக: , Upaganamadhra Boga - இசைபாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும் குணவாதபிச , Gunavadhapicha - குணமடியாகவும் ததேகளே , Thadhekale - அந்த நம்மாழ்வாரொருவரையே தமக்கு ரோஷியாகக்கொண்டவருமான மதுரகவி , Madhurakavi - மதுரகவியாழ்வார் மம ஹ்ருதயே , Mama Hrudhaye - என் நெஞ்சில் ஆவிரஸ்து , Aavirasthu - ஆவிர்ப்பவிக்கக்கடவர் |
| 0 | கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் || 39 | வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே அரண் | வேறு ஒன்றும் நான் அறியேன் , Veru Ondrum Naan Ariyen - நம்மாழ்வார் தவிர வேறொரு பொருளும் நான் அறியமாட்டேன் வேதம் தமிழ் செய்த , Vedham Tamil Seidha - வேதார்த்தங்களைத் தமிழாக அருளிச்செய்த மாறன் , Maaran - மாறனென்னும் நாமத்தையுடையவரும் வண் குருகூர் ஏறு , Van Kurugoor Eru - அழகிய திருக்குருகூர் நகர்க்குத்தலைவருமான சடகோபன் , Sadagopan - நம்மாழ்வார் எங்கள் வாழ்வு ஆம் என்று , Engal Vaazhvu Aam Endru - எமக்கு உஜ்ஜீவநராவர் என்று ஏத்தும் , Ethum - தோத்திரஞ் செய்தருளின மதுரகவியார் , Madhurakaviyar - மதுரகவியாழ்வார் எம்மை ஆள்வார் , Emmai Aalvar - நம்மை ஆள்பவர் அவரே , avare - அந்த மதுரகவிகளே அரண் , Aran - (ப்ரபந்நகுலத்துக்கு) காவலாயிருப்பவர் |