Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: சிறிய திருமடல் (18 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0சிறிய திருமடல் - தனியன் || திருமங்கையாழ்வாரையும் அவரது திவ்வியாயுதத்தையும் வாழ்த்துகிறது இது. (எப்பெருமானது வைபவங்களைப் பொறாத பாவிகளைக் கண்டித்து ஒழிப்பவரும், கலி தோஷம் நீங்கும்படி உலகை வாழ்விப்பவரும், திருக்குறையலூரைத் திருவவதாரஸ்தலமாக வுடையவரும், மங்கைநகர்க்கு அரசருமான திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டாக வாழவேணும். அவரது திருக்கையிலே திகழ்வதும் எம்பெருமானை வெருட்டித் திருமந்திரோபதேசம் செய்வித்துக் கொண்டதுமான வேலும் வாழி என்றதாயிற்று) 35
வாழிபரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்
பரகாலன், parakalan - சத்ருக்களுக்கு ம்ருத்யு போன்று இருப்பவர்
வாழி, vazhi - வாழ்ந்தருள வேண்டும்
கலிகன்றி, kalikanri - கலியினால் வரும் தோஷத்தை போக்குபவரான
வாழி, vazhi - திருமங்கையாழ்வார் வாழி
குறையலூர், kuraiyalur - திருக்குறையலூரிலே
வாழ், vazh - நித்யவாஸம் பண்ணும் (எம்போதும் இருக்கக்கூடிய)
வேந்தன், venthan - அரசன், வேந்தன், ராஜாவானவர்
வாழி, vazhi - வாழி
மாயோனை, maayonai - வயலாளி மணவாளன் கண்ணன் (ஆச்சரியமான குணத்தை உடைய ஸர்வேஸ்வரன் அவனிடத்தே)
வாள்வலியால், valvaliyal - தன் வாளின் வலிமையைக் காட்டி
மந்திரம், mandiram - பெரிய திருமந்திரத்தை
கொள், kol - உபதேசிக்கபெற்றவராய்
மங்கையர், mangaiyar - திருமங்கையில் உள்ளாருக்கு
கோன், kon - நிர்வாககராய்
தூயேன், thuyen - உள்ளும் புறமும் ஒக்க சுத்தியையுடையவரான ஆழ்வாருடைய
சுடர், sudar - ஒளியையுடைத்தாய்
மானம், maanam - மிகப்பெரியதான
வேல், vel - வேலானது
வாழி, vazhi - வாழ்ந்திடுக
0சிறிய திருமடல் - தனியன் || (முள்ளிச் செழுமலரோ) 36
முள்ளிச் செழுமலரோ தாரான் முளை மதியம்
கொல்லிக் கென்னுள்ளங் கொதியாமே வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்
Sezhum, செழும் - செழிப்புள்ள
Or, ஓர் - ஒப்பற்ற
Mulli malar thaaran, முள்ளி மலர் தாரான் - முள்ளிப்பூக்களாலே கட்டப்பட்ட மாலையை உடையவராய்
Vallal, வள்ளல் - கொடையாளியாய்
Thiruvaalan, திருவாளன் - (பகவத் கைங்கர்யமாகிற) செல்வத்தையுடையராய்
Maruvaalan, மருவாளன் - (கையில்) பொருந்திய வாளையுடையராய்
Seer Kaliyan, சீர் கலியன் - கல்யாண குணங்களுடைய கலிகன்றியானவர்
Mulai mathi am kollikku, முளை மதி அம் கொள்ளிக்கு - உதிக்கிற சந்திரனாகிற அழகிய நெருப்புக்கு
En ullam, என் உள்ளம் - என்னுடைய நெஞ்சு
Kothiyame, கொதியாமே - பரிதபிக்காதபடி
Kaar Kaliyan, கார் கலியை - கறுத்த கலிதோஷத்தை
Vetti, வெட்டி - போக்கி
Madal thandhaan, மடல் தந்தான் - ‘சிறிய திருமடல்' என்னும் திவ்யப்ரபந்தத்தைத் தந்தருளினார்
2673சிறிய திருமடல் || 1
கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
கார் ஆர் வரை கொங்கை, Kaar Aar Varai Kongai - மேகங்கள் நிறைந்து படியப்பெற்ற (திருமாலிருஞ்சோலையும் திருவேங்கடமுமாகிற) திருமலைகளை முலையாக உடையளாயும்.
கண் ஆர் கடல் உடுக்கை, Kan Aar Kadal Udukkai - இடமுடைத்தான (விசாலமான) கடலைச சேலையாக வுடையளாயும்.
சீர் ஆர் சுடர் சுட்டி, Seer Aar Sudar Sutti - (ப்ரகாசமாகிற) சிறப்புப் பொருந்திய ஸூர்யனைச சுட்டி யென்னும் ஆபரணமாக வுடையளாயும்.
செம் கலுழி பேர் ஆறு பேர் ஆரம் மார்பின், Sem Kaluzhi Peer Aaru Peer Aaram Maarbin - சிவந்து கலங்கியுள்ள பெறிய ஆறுகளைச் சிறந்த ஹாரம் பூண்ட மார்பாக உடையளாயும்
பெரு மா மழை கூந்தல், Peru Maa Mazhai Koondhal - பெருத்துக் கறுத்த மேகங்களைக் கூந்தலாக வுடையளாயும்
ஆரம் நீர் வேலி, Aaram Neer Veli - ஆவரண ஜலத்தைக் காப்பாக வுடையளாயுமிருக்கிற,
நிலம் மங்கை என்னும் இப் பாரோர், Nilam Mangai Ennum Ip Paaror - ஸ்ரீ பூமிப் பிராட்டி யென்று சொல்லப்படுகிற இந் நில வுலகத்திலே உள்ளவர்களால்
சொலப்பட்ட, Solappatta - கூறப்படுகின்ற (புருஷார்த்தங்கள்)
மூன்று அன்றே, Moondru Andrae - மூன்றேயாம்,
அ மூன்றும் ஆராயில் அறம் பொருள் இன்பம் என்று, A Moondrum Aaraayil Aram Porul Inbam Endru - அம்மூன்று புருஷார்த்தங்கள் எவை யென்று ஆராய்ந்தால், தர்மம் அர்த்தம் காமம் என்பனவாம்.
2673சிறிய திருமடல் || 2
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
இவற்றினிடை, Ivatrinidai - இம்மூன்று புருஷார்த்தங்களுள்
அதனை எய்துவார் ஆர் ஆர், Adhanai Eydhuvaar Aar Aar - அக் காம புருஷார்த்தத்தை அடைகின்றவர்கள் யாவரோ
சீர் ஆர் இரு கலையும் எய்துவர், Seer Aar Iru Kalaiyum Eydhuvar - (அவர்கள்) சீர்மை பொருந்திய தருமம் அர்த்தம் என்கிற மற்றை யிரண்டு அம்சங்களையும் அடைந்தவராவர்,
ஆரானும், Aaraanum - அறிவில் குறைந்த யாரோ சிலர்
சிக்கன மற்று உண்டு என்பார், Sikkan Matru Undu Enpaar - சாச்வதமான (மோக்ஷமென்று மற்றொரு புருஷார்த்த மிருப்பதாகச் சொல்லுவர்கள்
என்பது தான் அதுவும் ஓராமை அன்றே, Enbathu Thaan Adhuvum Ooraamai Andrae - அவர்கள் அப்படிச் சொல்லுகிறதும் ஆராய்ச்சி யில்லாமல் (மூடத்தனமாகச் சொல்வதேயாம்,
உலகத்தார் சொல்லும் சொல் அது, Ulagaththaar Sollum Sol Adhu - உலகத்தவர்களாலே சொல்லப்படுகிற அந்த மோக் ஷவாதமானது
ஒராமை ஆம் ஆறு உரைக்கேன், Ooraamai Aam Aaru Uraikken - ஆராய்ச்சியற்றது என்னுமிடத்தை (உங்கட்குத்தெரியச்) சொல்லுகிறேன்,
கேள் ஆமே, Keel Aame - (அதனை நீங்கள் காது கொடுத்து) கேட்கக்கூடுமே? (கேளுங்கள்)
கார் ஆர் புரலி ஏழ் பூண்ட தனி ஆழி, Kaar Aar Purali Ezh Poondu Thani Aazhi - மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப்பெற்றதும் ஒற்றை சக்கரத்தை யுடையதுமான
தேர் ஆர், Ther Aar - தேரிலே பொருந்தி யிருப்பவனும்
நிறை கதிரோன், Nirai Kadhiron - நிறைந்த கிரணங்களை யுடைய வனுமான ஸூர்யனுடைய
மண்டலத்தை கீண்டு புக்கு, Mandalaiththai Keendu Pukku - மண்டலத்தைக் கீண்டு கொண்டு அதன் வழியே போய்
அங்கு, Angu - ஒரு தேச விசேஷத்திலே (ஸ்ரீவைகுண்டத்திலே)
ஆரா அமுதம் எய்தி, Aaraa Amudham Eydhi - பரம போக்யமான அம்ருதம்போன்ற பரம புருஷனைப் பெற்று
அதில் நின்றும் வாரா தொழிவது ஒன்று உண்டே, Adhil Nindrum Vaaraa Thozhivathu Ondru Undae - அப்பரமபத்தில் நின்றும் என்றைக்கும் திரும்பிவராமல் அங்கேயே கிடப்பதென்கிற ஒரு பொருள் பொருத்த முடைத்தோ?
அது நிற்க, Adhu Nirka - அவ்விஷணம் ஒருபுற மிருக்கட்டும்
ஏர் ஆர் முயல்விட்டு, Aer Aar Muyalvittu - அழகிய முயலை விட்டு
காக்கை பின் போவதே, Kaakkai Pin Povadhe - (உபயோகமற்ற) காக்கை யின் பின்னே தொடர்ந்து போவாருமுண்டோ?
2673சிறிய திருமடல் || 3
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன்
ஏர் ஆர் இள முலையீர், Aer Aar Ila Mulaiyeer - அழகிய இளமுலைகளையுடைய மாதர்காள்!
என் தனக்கு உற்றது தான், En Thanakku Utrathu Thaan - எனக்குநேர்ந்த ஸம்பவம் (யாதெனில் சொல்லுகிறேன் கேளுங்கள்)
கார் ஆர் குழல் எடுத்து கட்டி, Kaar Aar Kuzhal Eduthu Katti - கரிய நிறமுடைய கூந்தலை (அலைய வொண்ணாதபடி) மேலே தூக்கி முடித்து
கதிர் முலையை வார் ஆர வீக்கி, Kadhir Mulaiyai Vaar Aar Veekki - ஒளி மிக்க முலைகளைக் கச்சு நிறையும்படி நெருக்கிக் கட்டி
மணி மேகலை திருத்தி, Mani Megalai Thiruththi - ரத்னங்களிழைத்த அரைநூல் மாலையை ஒழுங்குபட அணிந்து
ஆர் ஆர் அயில் வேல் கண், Aar Aar Ayil Veel Kan - அழகு பொருந்திய கூரிய வேல் போன்ற கண்களை
அஞ்சனத்தின் நீறு அணிந்து, Anjanaththin Neeru Anindhu - மையின் சுண்ணத்தாலே அலங்கரித்து
சீர் ஆர் செழு பந்து கொண்டு, Seer Aar Sezhu Pandhu Kondo - மிகவும் அழகிய ஒரு பந்தைக்  கையிற்கொண்டு
நான் அடியா நின்றேன், Naan Adiya Nindren - நான் அடித்துக்கொண்டிருந்தேன், (அப்படி யிருக்கையில்)
நீர் ஆர் கமலம் போல் செம்கண், Neer Aar Kamalam Pol Semkan - தண்ணீரை விட்டுப் பிரியாத தாமரைப் பூப் போன்ற சிவந்த திருக்கண்களை யுடையனான
மால் என்ற ஒருவன், Maal Endra Oruvan - திருமால் என்று சொல்லப்படுகிற ஒரு புருஷன்
பாரோர்கள் எல்லாம் மகிழ, Parorhal Ellam Magizha - உலகத்தாரனைவரும் மகிழும்படி
பறை கறங்க, Parai Karangka - பறையென்ற வாத்யம் முழங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி, Seer Ar Kudam Irandu Aendhi - சிறந்த இரண்டு குடங்களைக் கையிலேந்திக்கொண்டு
செழும் தெருவே, Sezhum Theruve - “இப்பெரிய வீதியிலே
ஆர் ஆர் என சொல்லி, Ar Ar En Solli - (எனது குடக் கூத்துக்குத் தப்பிப் பிழைக்கும் மாதர்) ஆரேனு முண்டோ? ஆரேனுமுண்டோ?“ என்று சொல்லிக்கொண்டு
ஆடும் அது கண்டு, Aadum Adhu Kandu - குடக் கூத்தாடின படியைக் கண்டு
ஏர் ஆர் இள முலையார், Aer Ar Ila Mulaiyar - அழகிய இள முலைகளையுடைய மாதர்களும்
வாராயோ என்றார்க்கு, Vaarayo Endraarkku - “அடி! நீயுழ்காண வரமாட்டாயோ?“ என் றழைக்க அவர்கட்கு (உடன்பட்டு)
என் பல் வினையால், En Pal Vinaiyaal - எனது கொடியபாவத்தினால்
சென்றேன், Sendren - அவர்களுடன்கூடி அவ்விடத்தேறப்போனேன் (போனதும்)
கார் ஆர் மணி நிறமும், Kaar Ar Mani Nirammum - (முன்பு அவனோடு கலந்த்தனால் பெற்றிருந்த) நீலமணி நிறத்தையும்
கை வளையும், Kai Valaiyum - கையில் தங்கியிருந்த வளைகளையும்
நான் காணேன், Naan Kaanen - நான் இழந்தவளானேன்,
ஆரானும் சொல்லிற்றும், Aaraanum Sollitrum - (உற்றாருறவினர்களில்) ஆராவது எதையாவது ஹிதமாகச் சொன்னால் அதையும் உதறித் தள்ளுபவளாயினேன்.
2673சிறிய திருமடல் || 4
அறிவு அழிந்து
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார்
அறிவு அழிந்து, Arivu Azhindhu - மதிகெட்டு
தீரா உடம் பொடு, Theera Udam Podu - ஒழிய மாட்டாத உடம்போடு கூடி
பேது உறுவேன், Paethu Uruveen - பைத்தியம் பிடித்தவள் போன்றிருந்த என்னை
எர் ஆர் கிளிகிளவி எம்அனை கண்டு இரங்கி, Er Ar Kilikilavi Em Anai Kandu Irangi - அழகிய கிளியன் பேச்சுப் போன்ற பேச்சையுடையளான என் தாயானவள் கண்டு இரக்கங்கொண்டு
தான வந்து, Thaan Vandhu - தானே (என் அருகில்) வந்து
என்னை, Ennai - எனக்கு
சீர் ஆர் செழு புழுதிகாப்பு இட்டு, Seer Ar Sezhu Puzhudikaappu Ittu - அழகிய சிறந்த பாகவத ஸ்ரீபாத்தூளியைக் கொண்டு ரக்ஷையிட்டு
செம்குறிஞ்சிதார் ஆர் நறுமாலை சாத்தற்கு, Semkurinjithaar Ar Narumaalai Saaththarku - செங்குறிஞ்சி மலர்கள் நிறைந்த மணம் மிக்க மாலையை அணிந்துள்ள ‘சாஸ்தா‘ என்கிற தேவதாந்தரத்திற்கு
தான் பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தாள், Thaan Pinnum Neeradhana Ondru Neerndhaal - தான் இதுவரை ஒருநாளும் செய்தறியாத ஒரு அஞ்சலியைச் செய்தான்.
அதனாலும் என்சிந்தை நோய் தீராது, Adhanaalum Enchinthai Noi Theeraadhu - அப்படி செய்த்தனாலும் எனது  மனோவியாதானது தீர்ந்த்தில்லை,
என் பேதுறவு தீராது, En Paethuravu Theeraadhu - எனது அறிவு தேடும் தீர வில்லை,
மற்று, Mattru - அதற்குமேல்
ஆங்கே ஆரானும், Aange Aaraanum - அங்கிருந்த யாரோ சில பழம்
மூது அறியும் அம்மனைமார், Moothu Arivum Ammanaimaar - பாட்டுகளறிந்த பாட்டிமார்கள்
அது கண்டு, Adhu Kandu - அப்படிப்பட்ட எனது சொல்லத் தொடங்கினர், (என்ன சொன்னார்களென்னில்)
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திர் ஏல் ஆரானும் மெய்ப்படுவன் என்றார், Paaroar Solappadum Kattupaduththir Ael Aaraanum Meippadhuvan Endraar - “குறி கேட்பதென்று உலகத்தார் ஒன்று சொல்வதுண்டு, அதைச்செய்தீர்களாகில் (இந்நோயை உண்டுபண்ணினவன் யாராயிருந்தாலும் உண்மையாய் வெளிப்பட்டுவிடுகிறான்“ என்று சொன்னார்கள்
2673சிறிய திருமடல் || 5
அது கேட்டு
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
அதுகேட்டு, Adhukeettu - அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த அந்த வார்த்தையையே கேட்டு
கார் ஆர் குழல் கொண்டை, Kaar Ar Kuzhal Konda - கறுத்த மயிர் முடியை யுடையளான
கட்டுவிச்சி, Kattuvichchi - குறிசொல்லுங் குறத்தியானவள் (ஒருவரும் அழையாதிருக்கத் தானாகவே வந்து)
கட்டேறி, Katteeri - தெய்வ ஆவேசங்கொண்டு
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா, Seer Ar Sulagil Sila Nel Pidiththu Eriyaa - அழகியதொரு சிறுமுறத்தில் நின்றும் சில நெற்களைப் பிடித்தெடுத்து முன்னே வீசியெறிந்து (குறிபார்த்து)
வேரா, Veeraa - வேர்வைவிட்டு
விதிர்விதிரா, Vithirvithiraa - சுழன்று
மெயசிலிரா, Meichilirah - மயிர்க்கூச்செறிந்து
கை மோவா, Kai Moovaa - கையை மோந்துபார்த்து
பேர் ஆயிரம் உடையான் என்றாள், Paer Aayiram Udaiyaan Endraaal - ஆயிரந் திருநாமங்களையுடையனான எம்பெருமானே இந்நோய் செய்தவன்) என்று எண்ணனாள்.
பேர்த்தேயும், Pertaeyum - அதற்குமேல்
கார் ஆர், Kaar Aar - (அவனது) காளமேகம் போன்ற திருமேனியைப் படியெடுத்துக்கொட்டினாள்,
கையதுவும், Kaiyathuvum - (அவனது) திருக்கையிலே யுள்ளதும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள், Seer Aar Valampuriye Enraal - அழகிய வலம்புரிச் சங்கமேயென்று அபிநயித்துக்காட்டினாள்
திரு துழாய் தார் ஆர் நறுமாலை கட்டுரைத்தான், Thiru Thuzhai Thaar Aar Narumalai Katturaiththaan - திருத்துழாய்மலர்கள் நிறைந்த மணம் மிக்க மாலையையும் அபிநயித்துக் காட்டினாள்.
கட்டுரையா, Katturaiyaa - ஆக இவ்வளவும் அங்க சேஷ்டைகளாலே காட்டின் பின்பு (வாய்விட்டுச் சொன்னதாவது)
நீர் ஏதும் அஞ்சேல்மின், Neer Aedhum Anjaelmin - “நீங்கள் சிறிதும் பயப்பட வேண்டா
நும்மகளை நோய் செய்தான், Nummagalai Noi Seiththaan - உங்கள் பெண்ணை (இப்படி) நோவு படுத்தினவன்
ஆரானும் அல்லன், Aaraanum Allan - யாரோ ஒரு ஸுத்தர புருஷனல்லன் (தேவதாந்தரங்களினால் வந்த நோய் அல்ல இது)
அவனை நான் அறிந்தேன், Avanai Naan Arindhen - நோவுபடுத்தின புருஷனை (இன்னானென்று) நான் தெரிந்துகொண்டேன்,
கூர் ஆர் வேல் கண்ணீர், Koora Aar Veel Kannir - கூரிய வேல் போன்ற கண்களையுடைய நங்கைமீர்களே!
உமக்கு அறிய கூறுகேனோ, Umakku Ariya Koorgeno - உங்களுக்கு (அவனைத் தெரியச்சொல்லட்டுமா?
2673சிறிய திருமடல் || 6
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்
இ வையம் ஆரால் அடி அளப்புண்டது, I Vaiyam Aaraal Adi Alappundathu - யாவனொருவனாலே இப்பூமியானது அளக்கப்பட்டதோ.
இலங்கை ஆரால் பொடி பொடி ஆவீழ்ந்தது, Ilangai Aaraal Podi Podi Aaveezhnthathu - இலங்காபுரியானது யாராலே பொடியாக்கப்பட்டு நசித்தொழிந்த்தோ,
ஆராலே கல்மாரி காத்தது, Aaraale Kalmaari Kaaththathu - யாவனொருவனாலே கல்மழையானது தடுக்கப்பட்டதோ,
ஆழி நீர் ஆரால் கடைந்திடப்பட்டது, Aazhi Neer Aaraal Kadaindhidappattathu - கடலானது யாவனொருவனாலே கடையப்பட்டதோ,
அவன், Avan - அக்காரியங்களெல்லாஞ்செய்த ஒரு விலக்ஷண புருஷன்
ஊர் ஆ நிரை மேய்த்து, Oor Aa Nirai Maeyththu - ஊரிலுள்ள பசுக்கூட்டங்களையெல்லாம் மேய்த்தும்
உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும், Ulaku Ellam Undu Umizhndhum - உலகங்களை யெல்லாம் (பிரளய காலத்திலே) அமுது செய்தும் (ஸ்ருஷ்டி காலத்திலே) வெளிப்படுத்தியும்
ஆராத தன்மையன் ஆய், Aaradha Thanmaiyan Aay - (இத்தகைய பல செயல்களாலே தனது திருக்குணங்களை வெளிப்படுத்தினவளவிலும்) த்ருப்தி பெறாமல் (ஸௌலப்ய குணத்தை நன்குவிளக்க வேண்டி)
ஒரு நாள், Oru Naal - ஒருநாளில்
ஆங்கு ஆய்ப்பாடி, Aangu Aayppadi - அந்தத் திருவாய்வ்பாடியிலே
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம்துவர் வாய் வார் ஆர் வனம் முலையாள், Seer Aar Kalai Alkul Seer Adi Semthuvaar Vaai Vaar Aar Vanam Mulaiyaal - அழகிய சேலையை யணிந்த அல்குலை யுடையவளும், அழகிய கால்களையுடையவளும் மிகவுஞ் சிவந்த அதரத்தை யுடையவளும் கச்சணிந்த அழகிய முலைகளை யுடையவளுமான யசோதை
மத்து ஆர பற்றிக்கொண்டு, Mattu Aar Pattrikondru - மத்தை அழுத்தப் பிடித்துக் கொண்டு
ஏர் ஆர் இடைநோவ, Aer Aar Idainova - அழகிய இடுப்பு நோகும்படி
எத்தனார் போதும் ஆய், Ethanaar Podhum Aay - வெகுகாலமாக
சீர் ஆர் தயிர் கடைந்து, Seer Aar Thayir Kadaindhu - சிறந்த தயிரைக் கடைந்து
திரண்ட வெண்ணெய்தனை, Thiranda Vennaythani - (அதில்) திரண்ட வெண்ணையை
வேர் ஆர்றுதல் மடவான், Veer Aarrudhal Madavaan - (கடைந்த ச்ரமத்தாலே) வேர்வைமிக்க நெற்றியையுடைளான அவ் யசோதை
வேறு ஓர் கலத்து இட்டு, Veeru Oru Kalathu Ittu - வேறொரு பாத்திரத்திலே இட்டு
அதனை, Adhanai - அந்த வெண்ணெய்க்கலத்தை
நார் ஆர் உறி ஏற்றி, Naar Aar Uri Aetri - (விரல் கூட நுழைக்க வொண்ணாதபடி) நார் நெருக்கத்தையுடைய உறியின் மேலேற்றி
நன்கு அமையவைத்து, Nangu Amayavaithu - ஸுரக்ஷிதமாம்படி வைத்து விட்டு
போர் ஆர் வேல் கண்மடவாள், Por Aar Vel Kanmadavaal - யுத்தத்திற்கு ஸந்நத்தமான வேல் போன்ற (கூர்மையான) கண்களை யுடையளான அவ் யசோதையானவள்
போம் தனையும், Poom Thanaiyum - வெளியில் போகிறவரைக்கும்
ஓராதவன்போல் பொய் உறக்கம் உறங்கி, Ooraadhavanpool Poi Urakkam Urangi - ஒன்று மறியாதவன் போலே திருட்டுத் தூக்கம் தூங்கி
அறிவு உற்று, Arivu Utru - (அவள் போனவுடனே கண் விழித்தெழுந்து போய்
தார் ஆர் தட தோள்கள உள் அளவும் கைநீட்டி, Thaar Aar Thada Tholgal Ula Alavum Kainneetti - மாலையணிந்த பெரிய திருந்தோள்களைத்தாழின் அடிவரையில் புகவிட்டு
ஆராத வெண்ணெய் விழுங்கி, Aaraadha Vennai Vizhunki - (எவ்வளவு உண்டாலும் திருப்தியைத்) தரமாட்டாத வெண்ணையை அமுது செய்து
அருகு இருந்த, Arugu Irundha - (அந்த வெண்ணெய்த் தாழியின்) பக்கத்தில் இருந்த
மோர் ஆர் குடம், Moar Ar Kudam - மோர் நிறைந்த குடத்தை
உருட்டி, Urutti - (அதில் அநாதரம் தோற்ற) உருட்டி
முன்கிடந்த தானத்தே, Munkidandha Thaanatthae - முன்னே படுத்திருந்த இடத்திலேயே
ஓராதவன் போல், Ooradhavan Pol - ஒரு ஸமாசாரமும் தெரியாதவன்போன்று
கிடந்தானை, Kidandhaanai - படுத்துக்கொண்டிருந்த கண்ணனை
அவளும் வாரா கண்டு, Avalum Vaaraa Kandu - அவ் யசோதையும் வந்து கண்டு
தான் வைத்தது காணாள், Thaan Vaiththathu Kaanal - தான் (உறியிலே சேமித்து) வைத்த வெண்ணையைக் காணாதவளாய்
வயிறு அடித்து, Vayiru Adiththu - (இத்தனையும் தின்றால் சரிக்குமோவென்று) வயிற்றிலே மோதிக்கொண்டு
ஐயர் இவர் அல்லால், Aiyar Ivar Allaal - இந்த மஹாநுபாவர் தவிர
இங்கு புகுதுவார் ஆர் ஆர், Ingu Pugudhuvaar Ar Ar - இங்கே வந்தவர் வேறுயார்? (யாருமில்லை, இவரே தின்றிருக்க வேண்டுமென்று நிச்சயித்து)
இது செய்தீர் நீராம் என்று, Idhu Seidheer Neeraam Endru - ‘இந்தக் காரியம் செய்தவர் நீர்தான்‘ என்று சொல்லி
தீரா வெகுளியள் ஆய், Theeraa Veguliyal Aay - அடங்காத கோபத்தையுடையளாய்
ஓர் நெடு கயிற்றால், Oor Nedu Kayittraal - கையிலகப்பட்டதொருகுறுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண, Ooraarhal Ellaarum Kaan - ஊரிலுள்ளாரனைவரும் (இந்த எளிமையைக்) காணும்படியாக
உரலோடே சிக்கன ஆர்த்து அடிப்ப, Uralodae Chikkan Aarthu Adippa - ஒரு உரலோட அழுத்தக்கட்டி அடிக்க
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான், Aaraa Vayitrinodu Aattraadhhaan - மிகவும் வயிறெரிந்து வருந்தி நிற்பவன்
2673சிறிய திருமடல் || 7
அன்றியும்
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான்
அன்றியும் நீர் ஆர் நெடு கயத்தைசென்று, Andriyum Neer Ar Nedu Kayaththichendru - மேலும் நீர் நிறைந்த பெரியதொரு மொய்கைக்குப் போய்
அலைக்க நின்று, Alaikka Nindru - அப்பொய்கையின் வெள்ளம் வெளி வழியும்படி (தன்னேராயிரம் பிள்ளைகளும் தானுமாகத்) திளைத்து
ஓர் ஆயிரம் பணம் வெங்கோ இயல் நாகத்தை, Oor Aayiram Panam Vengoo Iyala Naagaththai - ஆயிரம் படங்களை யுடையதும் யமன்போலக் கொடிய ஸ்வபாவத்தையுடையதுமான காளிய நாகத்தை
உரப்பி, Urappi - அதட்டி
எனக்கு வாராய் என்று, Enakku Vaarai Endru - என்னோடு போர் செய்ய வா என்றழைத்து
மற்றதன் மத்தகத்து, Mattradhan Mathakathu - அதன் தலைமீது
சீர் ஆர் திரு அடியால் பாய்ந்தான், Seer Aar Thiru Adiyaal Paayndhaan - (தனது) அழகிய திருவடியால் பாய்ந்து நர்த்தனம் செய்தவன்,
2673சிறிய திருமடல் || 8
தன் சீதைக்கு
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம்
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
தன் சீதைக்கு நேர் ஆவன் என்று, Than Seethaikku Neer Aavan Endru - தனது தேவியான பிராட்டியோடே நான் ஸமானமாவேனென்று நினைத்து
ஓர் நிசாசரி வந்தாளை, Oru Nisaasari Vandhaalai - (என்னை மணந்துகொள் என்று சொல்லிக்கொண்டு) ஓடிவந்த சூர்ப்பணகை என்னும் ராக்ஷஸியை
கூர் ஆர்ந்த வாளால், Koora Aarntha Vaalal - கூர்மை பொருந்திய கத்தியினால்
கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து, Kodi Mookkum Kaathu Irandum Eera Viduthu - கொடிபோன்ற மூக்கையும் காதையும் அறுத்துத் துரத்தவிட்டு,
அவட்கு மூத்தோனை, Avadku Moothonai - அவளுடைய தமையனான கரனை
வெம் நரகம் சேரா வகையே சிலை குனித்தான், Vem Naragam Seeraa Vagaivey Silai Kuniththaan - ‘இனி இவன் வேறொரு கொடிய நரகம் போய் வேதனையநுபவிக்க வேண்டியதில்லை‘ யென்னும் படியாக ஸகல நரக வேதனைகளையும் போர்க்களத்திலே அவனுக்குதந்து வில்லை வளைத்துக்கொன்றொழித்தவன்
செம்துவர் வாய், Semthuvaar Vaai - மிகவும் சிவந்த அதரத்தை யுடையவளும்
வார் ஆர்வணம் முலையாள், Vaar Aarvanam Mulaiyaal - கச்சு அணிந்த அழகிய முலையையுடையவளுமான
வைதேவி காரணம் ஆ, Vaidhevi Kaaranam Aa - ஸீதாபிராட்டிக்காக
ஏர் ஆர் தட தோள் இராவணனை, Aer Aar Thada Thol Raavanai - அழகிய பெரிய ‘புஜங்களை யுடையனான இராவண்ணை
சீர் ஆர் ஈர் ஐந்து சிரம் அறுத்து செற்று, Seer Aar Eer Aindhu Siram Aruththu Settru - சிறந்த பத்துத் தலைகளையும் அறுத்துக் கொன்று
உகந்த, Ugantha - (முனிவர்களுடைய விரோதியைத் தீர்த்தோமென்று) திருவுள்ள முகந்த
செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷன்
2673சிறிய திருமடல் || 9
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும்
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த்
தார் ஆர்ந்த மார்வன்
பேர் ஆர் நெடுவேலோன் பொன் பெயரோன் ஆகத்தை, Per Aar Neduveeloan Pon Peyroon Aagaththai - (எப்போதும) யுத்ததிலே பொருந்தியிருக்கிற நீண்ட வேலாயுதத்தையுடையனான ஹிரண்யனுடைய உடலை
அரி உரு ஆய், Ari Uru Aay - நரஸிம்ஹரூபியாகி
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு, Koora Aarntha Val Ughiraal Keendu - கூர்மை மிக்கு நெருங்கின திரு நகங்களாலே பிளந்து
குடல், Kudal - அவ்வசுரனுடைய குடலை (பிடுங்கி யெடுத்து)
சீர் ஆர் திரு மார்பின்மேல் மாலை கட்டி, Seer Aar Thiru Maarbinmel Maalai Katti - அழகிய பிராட்டிக்கு இருப்பிடமான மார்பிலே வெற்றிலையாக அணிந்துகொண்டு
செம் குருதி சோரா கிடந்தானை, Sem Kuruthi Sooraa Kidandhaanai - சிவந்த ரத்தவெள்ளம் பெருக்கிக்கிடந்த அவ்வசுரனை
குங்குமம் தோள் கொட்டி, Kungumam Thol Kotti - குங்குமச் சேற்றினாலே அலங்கரிக்கப்பட்டுள்ள தனது திருத்தோளின் மேல் அறைந்துகொண்டு
ஆரா எழுந்தான், Aaraa Ezhundhaan - ஆரவாரஞ் செய்துகொண்டு எழுந்தவன்,
2673சிறிய திருமடல் || 10
தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள்
தடம் மால் வரை போலும் போர் ஆணை, Thadam Maal Varai Polum Poor Aanai - மிகப்பெரிய மலைபோன்ற மத்தகஜமானது
பொய்கை வாய் கோள்பட்டு நின்று அலறி, Poykai Vaai Kaalpattu Nindru Alari - நீர்நிலத்திலே முதலையின் வாயிலகப்பட்டு நின்று வருந்தி
ஓர் நெடுகையால் நீர் ஆர் கமலம் மலர் கொண்டு, Oor Nedugaiyaal Neer Aar Kamalam Malar Kondo - நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போதலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு
வெகுண்டு, Vegundu - (கஜேந்திர விரோதியின் மேல்) கோபித்து
தீராத சீற்றத்தால் சென்று, Theeraadha Seerthathaal Senru - அடங்காத அக்கோபத்தாடே (பொய்கைக்கரைக்கு) எழுந்தருளி
இரண்டு கூறு ஆக ஈரா, Irandu Koordu Aaga Eeraa - (முதலயை) இருதுண்டமாகப் பிளந்து
அதனை இடர் கடிந்தான் எம்பெருமான், Adhanai Idar Kadindhaan Emperumaan - அந்தக் கஜேந்திரனுடைய துன்பத்தைப் போக்கடித்த எம்பெருமான்
பேர் ஆயிரம் உடையான், Peer Aayiram Udaiyaan - (இப்படிப்பட்ட அளவற்ற காரியங்களுக்கு வாசகமான) ஸஹஸ்ர நாமங்களை யுடையவன், (அவ்வெம்பெருமான் தான்)
பேய் பெண்டீர்றும்மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தான், Pey Pendirrum Magalai Theeraa Noi Seithaan Ena Uraiththaan - அறிவு கெட்ட பெண்டுகளே! உங்கள் மகளுக்கு (இப்படிப்பட்ட) தீராத நோயை உண்டு பண்ணினான் காண்மின் என்று சொல்லிமுடித்தாள் (கட்டுவிச்சி)
2673சிறிய திருமடல் || 11
சிக்கென மற்று
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள்
எங்கள் அம்மனையும், Engal Ammanaiyum - (அதற்குமேல்) என்னுடைய தாயானவள்
மற்றுஆரானும் அல்லாமை சிக்கென கேட்டு, Mattru Aaraanum Allamai Sikken Kaettu - வேறு எந்த தேவதாந்தரமும் இந்த நோய்க்குக் காரணமல்லவென்வதை த்ருடமாகக் கேட்டுக்கொண்டு
போர் ஆர் வேல் கண்ணீர்!, Poor Aar Veel Kanneer - யுத்தத்திலே பொருந்தின வேல் போனற கூரிய கண்களை யுடைய தோழிமார்களே!
அவன் ஆகில், Avan Aagil - (இந்நோய் செய்தவன்) அந்த எம்பெருமானே யாகிற பக்ஷத்தில்
பூ துழாய் தாராது ஒழியுமே, Poo Thuzhaai Thaaradhu Ozhiyume - (இவளுக்கு உத்தேச்யமான) திருத்துழாய்ப் பிரஸாதத்தை தந்தருளாமற்போவனோ,
தன் அடிச்சி அல்லளே, Than Adicchi Allale - (இவள்) அவன்றனக்கு அடிமைப்பட்டவளன்றோ,
மற்று ஆரானும் அல்லனே என்று ஒழிந்தான், Mattru Aaraanum Allane Enru Ozhindhaan - (தைவாதீனமாக) வேறொருவனும் இந்நோய் செய்தவன்ன்றே என்று சொல்லிவிட்ட விசாரமற்றொழிந்தாள் (என்தாய்),
2673சிறிய திருமடல் || 12
நான் அவனைக்
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும்
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார்
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
நான், Naan - நானோவென்றால்
அவனை கார் ஆர் திருமேனி காண்டதுவே காரணம் ஆ, Avanai Kaar Aar Thirumeni Kaandathuvae Kaaranam Aa - அவனது கரிய திருமேனியை ஸேவித்தது முதலாக
பேரா பிதற்றாதரிதருவன், Pera Pitharatharidharuvan - உருமாறி வாய் வெருவிக் கொண்டு திரியாநின்றேன்,
பின்னையும், Pinnaim - அதற்குமேல்,
தண் வாடை, Than Vaadai - குளிர்ந்த காற்றானது
இ உடலை ஈரா புகுதலும், I Udalai Eera Pugudhalum - (எனது) இவ்வுடம்பைப் பிளந்துகொண்டு உள்ளேபுகுந்து
சோரா மறுக்கும், Sooraa Marukkum - தளர்த்தியை யுண்டாக்கித் துன்பப்படுத்துகின்றது
வகை அறியேன், Vagai Ariyeen - ஹிம்ஸிக்கும் ப்ரகாரங்களையும் பகுத்துச் சொல்ல அறிநின்றிலேன்,
சூழ் குழலார் ஆரானும், Sozh Kuzhalaar Aaraanum - நிறைந்த கூந்தலையுடைய பெண்கள் யாராகிலும்
ஏசுவர் என்னும் அதன் பழியை, Eesuvaar Ennum Athan Pazhiyai - அலர் தூற்ற, அத்தால் வரும் அபவாதத்தை
வாராமல் காப்பதற்கு, Vaaramal Kaappatharku - தடுத்துக் கொள்வதற்காகவே
வாளா இருந்தொழிந்தேன், Vaalai Irundhozhindhen - (இதுவரை) ஒன்றும் செய்யாமலிருந்துவிட்டேன்,
2673சிறிய திருமடல் || 13
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன்
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன்
ஊரார் உகப்பதே ஆயினேன்
மட நெஞ்சே, Mada Nenchae - -“அறிவு கெட்டுக் கிடக்கிற மனமே“!
வாராய், Vaarai - (தூது போக) எழுந்திரு
வந்து, Vandhu - அவ்வெம்பெருமான் பக்கலிலே சென்று
மணிவண்ணன், Manivannan - நீலமணிபோன்ற வடிவையுடையனான அவ்வெம்பெருமான்
நமக்கு அருளி, Namakku Aruli - நம்மேல் க்ருபைபண்ணி
சீர் ஆர் திரு துழாய் மாலை, Seer Aar Thiru Thuzhai Maalai - சிறந்த திருத்துழாய் மாலையை
தரும் தாரான் என்ற இரண்டத்தில் ஒன்றதனை, Tharum Thaaran Endra Irandathil Ondrathai - தருவன் தரமாட்டான் என்ற இரண்டு வார்த்தைகளில் ஏதாவதொரு வார்த்தையை (அவன் சொல்லும்படி நான் சொல்லும்படி நான் சொல்லி யனுப்புகிற சொல்லை)
ஒன்னாதார் ஆரானும் கேளாமே சொன்னக்கால், Onnaathaar Aaraanum Kelaamae Sonna Kaal - அவனை யுகவாதவர்கள் அவரும் கேளாதபடி நீ சொன்னாயாகில்,
பணி கேட்டு, Pani Kettu - அவ்வார்த்தையைக் கேட்டு
ஆராயும் எலும், Aaraayum Elum - (அன்புடன்) விசாரித்தானாகிலும் சரி.
அது அன்று எனிலும், Adhu Andru Enilum - அந்த ஸங்கதியே நமக்குத் தெரியாதென்று திரஸ்கரித்தாலும் சரி,
நீ போராது ஒழியாதே போந்திடு, Nee Poraadhu Ozhiyadhe Ponthidu - நீ இங்கேவாராது அங்கேயே தங்கிவிடாமல உடனே வந்து சேர்ந்துவிடு“
என்றேற்கு, Endraekku - என்று சொன்ன வண்ணன் பக்கலிலே சென்ற
நெஞ்சமும், Nenjammum - எனது மனந்தானும்
வாராதே, Vaaradhe - திரும்பி வருதலின்றியே
என்னை மறந்ததுதான், Ennai Marandhuthaan - என்னை மறந்து அங்கேயே தங்கிவிட்டது ஐயோ!
ஊரார் உகப்பதே ஆயினேன், Ooraar Ugappadhe Aayinaen - ஊரார் ஸந்தோஷிக்கும்படி யாகவே நிலை குலைந்தேன்,
2673சிறிய திருமடல் || 14
மற்று எனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும்
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்?
எனக்கு இங்கு ஆராய்வார் மற்று இல்லை, Enakku Ingu Aaraivaar Mattu Illai - என்னைப் பற்றிக் கவலைகொண்டு விசாரிப்பவர்கள் இங்கு யாருமில்லை.
என் ஆவி, En Aavi - எனது ஆத்மவஸ்து
அழல் வாய் மெழுகு போல் நீர் ஆய் உருகும், Azhala Vaai Mezhuvu Pol Neer Aay Urugum - நெருப்பினருகே வைத்த அரக்குப்போல் நீர்பண்டமாக உருகா நின்றது.
நெடுகண்கள் தாம், Nedugankal Thaam - நீண்ட கண்களும்
ஊரார் உறங்கிலும் உறங்கா, Ooraar Urangilum Urangaa - எல்லாரும் உறங்கும் போதிலும் உறங்கமாட்டா,
உத்தமன்தன், Uthamanthan - அப்புருஷோத்தமனுடைய
பேர் ஆயினவே, Per Aayinaave - திருநாமங்களா யுள்ளவற்றையே
பின்னையும், Pinnaim - மேன்மேலும்
பிதற்றுவன், Pithattruvan - வாய்வந்தபடி சொல்லிக் கொண்டிரா நின்றேன்
கார் ஆர் கடல் போலும் காமத்தர்ஆயினார், Kaar Aar Kadal Polum Kaamaththar Aayinaar - அகாதமான கடல் போல அளவு கடந்த காமத்தை யுடையவர்கள்
ஆரே, Aare - ஆர்தான்
பொல்லாமை அறிவார், Pollamaik Arivaar - ஸ்வரூப விரோத மறிவர்கள்?
2673சிறிய திருமடல் || 15
அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன்
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே?
வார் ஆர் வனம் முலை வாச வதத்தை என்று, Vaar Aar Vanam Mulai Vaas Vadhaththai Endru - கச்சணிந்த அழகிய முலையையுடைய வாசவதத்தை யென்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவள், Aaraanum Sollappaduvaal Aval - எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்டவளானவள்
ஆரானும் ஆதானும் அல்லள் காணீர், Aaraanum Aadhanum Allal Kaanir - ஸாமாந்யமான ஒருத்தி யல்லள் (மிகவும் பிரஸித்தை யாயிருப்பவள்)
அவளும், Avalum - அந்த வாஸவதத்தை தானும்
தன் பேர் ஆயம் எல்லாம் ஒழிய, Than Peer Aayam Ellam Ozhiy - தனது சிறந்த தோழிகளை யெல்லாம் விட்டிட்டு
பெருதெருவே, Perutheruve - பெரிய தெருவழியே
தார் ஆர் தட தோள் தளை காலன் பின் போனாள், Thaar Aar Thada Thol Thalai Kaalan Pin Ponaal - மாலை யணிந்த பெரிய தோள்களை யடையவனும் விலங்கிடப்பெற்ற கால்களையடைனுமான வத்ஸராஜ னென்பவன் பின்னேபுறப்பட்டுப் போனாள்
ஊரார் இகழ்ந்திடப் பட்டானே, Oorar Ikazhndhidap Pattane - (அவள்) ஊராராலே நிந்திக்கப்பட்டாளோ? (இல்லை)
இங்கு, Ingku - இப்படிப்பட்ட எனது அவஸ்தையிலே
எனக்கு, Enakku - பதற்றமுடைய எனக்கு
மற்று கற்பிப்பார், Mattru Karppipaar - எனது துணிவுக்கு எதிர்த்த தட்டான பொறுமையை உபதேசிப்பவர்கள்
ஆரானும், Aaraanum - ஆராயிருந்தாலும்
நாயகரே, Naayakare - அவர்கள் எனக்கு நியாமகராவரோ? (அவர்கள் பேச்சை நான் பேணமாட்டேன்)
2673சிறிய திருமடல் || 16
நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர்
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல
நான் அவனை கார் ஆர் திரு மேனி காணும் அளவும் போய், Naan Avanai Kaar Aar Thiru Meeni Kaanum Alavum Poi - (காமம் தலைக்கொண்ட) நான் அவனுடைய காளமேகத் திருவுருவைக்கண்டு களிக்கும் வரையில் ஊருராகப் போய் சீர் ஆர் திருவேங்கடமே வடமதுரை சிறந்த திருவேங்கடமலை, திருக்கோவலூர், மதிள் சூழ்ந்த காஞ்சீநகரத்திலுள்ள ஊரகம், அப்பக்குடத்தான் ஸந்நிதி, சலியாமற் கிடந்த மருத மரங்க முறித்த பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருவெள்ளறை, திருவெஃகா, பெரிய திருவலி நகர், திருத்தண்கால், திருநறையூர், குட்டநாட்டுத் திருப்புலியூர், அழகிய தோட்டங்கள் சூழ்ந்த திருவரங்கம், திருக்கண்ணமங்கை, நீலமணிவண்ணனான கண்ணபிரானது திவ்ய தேசமாகிய திருவிண்ணகர், அழகிய திருக்கண்ணபுரம், திருச்சேறை, தேரழுந்தூர், ச்ரமஹரமான திருக்குடந்ரை, கடிகைத் தடங்குன்று (அதாவது சோளஸிம்ஹபுரம்) திருக்கடல்மல்லை, அழகிய சோலைகள் சூழ்ந்த திருவிடவெந்தை, திருநீர்மலை, அழகிய திருமாலிருஞ்சோலை திருமோகூர், உலகத்தாரனைவரும் துதிக்கின்ற ஸ்ரீபதரிகாச்ரமம், வடதிசை மதுரை (ஆகிய)
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே, Oor Aaya Ellam Ozhiyamae - திவ்ய தேசங்களா யுள்ளவற்றில் ஓரிடமும் தப்பாமல் (எங்கும் புகுந்து)
ஓர் ஆனை கொம்பு ஒசிந்து ஓர் ஆனை கோள் விடுத்த சீரானை, Oru Aanai Kombu Osinthu Oru Aanai Kola Viduttha Seeranaai - குவலயாபீடமென்ற ஒரு யானையின் கொம்பை முறித்தும் மற்றொரு யானையின் இடரைப் போக்கியும் சீர்மை பெற்றவனாய்
செம் கண் கொடியானை, Sem Kan Kodiyaanaai - சிவந்தகண்களை யுடையனாய்க் கொண்டு எனக்கு எட்டர் தேயிருப்பவனாய்
தேன் துழாய் தாரானை, Then Thuzhai Thaaranaai - தேனொழுகுகின்ற திருத்துழாய் மாலையை யுடையனாய்
தாமரைபோல் கண்ணானை அவனை, Thamarai Pol Kannaanaai Avanai - தாமரைபோன்ற திருக்கண்களையுடையனான அப்பெருமானை குறித்து
எண் அஞசீர் பேர் ஆயிரம்  பிதற்றி, En Anjasir Peer Aayiram Pithattri - எண்ணமுடியாத (கொடிய) குணங்களுக்கு வாசகமான நூதந) ஸஹஸ்ர நாமங்களைப் பிதற்றிக்கொண்டு
பெரு தெருவே, Peru Theruve - பெரிய தெருவழியே
ஊரார் இதிழிலும், Oorar Idhizhilum - (என்னை) ஊரிலுள்ளாரெல்லாரும் பழித்தாலும்
நான் வார் ஆர் பூ பெண்னை மடல் ஊராது ஒழியேன், Naan Vaar Aar Poo Pennai Madal Oorathu Ozhiyen - நான், நீண்டு அழகிய பனை மட்டையைக் கொண்டு மட்லூர்வதை நிறுத்தமாட்டேன் (மடலூர்ந்தே தீர்வேன்.