Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: திருசந்தவிருத்தம் - தனியன் (2 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0திருசந்தவிருத்தம் - தனியன் || (தருச்சந்தப் பொழில்) 16
தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன்வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும்
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே
Tharu sandham Pozhil thazhuvu tharaniyin, தரு சந்தம் பொழில் தழுவு தாரணியின் - வ்ருக்ஷங்களினுடைய அழகையுடைய சோலைகளாலே சூழப்பட்ட பூமியிலே உள்ளவர்களுடைய
Thuyar theera, துயர் தீர - துக்கம் தீரும்படியாக
Thiruchandha virutham sei, திருச்சந்த விருத்தம் செய் - திருச்சந்த விருத்தம்' என்னும் திவ்யப்ரபந்தத்தைச் செய்தருளிய
Thirumazhisai paran varum oor, திருமழிசை பரன் வரும் ஊர் - திருமழிசைப்பிரான் திருவவதரித்த திவ்யதேசம் எதுவென்றால்
Karu sandhum, கரு சந்தும் - பெருமை பொருந்திய சந்தன மரங்களும்
Kaar akilum, கார் அகிலும் - கறுத்த அகிற்கட்டைகளும்
Kamazh kongum, கமழ் கோங்கும் - மணம் மிக்க கோங்கு மரங்களும்
Manam naarum, மணம் நாறும் - பரிமளம் வீசப் பெற்றதாய்
Thiru, திரு - பெரிய பிராட்டியார்
Sandhathudan, சந்தத்துடன் - அபிநிவேசத்தோடு
Maruvu, மருவு - பொருந்தி வாழப்பெற்றதான
Thiru mazhisai valam pathiye, திரு மழிசை வளம் பதியே - திருமழிசை என்னும் செல்வம் மிக்க திருநகரியே யாம்
0திருசந்தவிருத்தம் - தனியன் || (உலகும் மழிசையும்) 17
உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
வைத் தெடுத்த பக்கம் வலிது
Pulavar, புலவர் - ஸர்வஜ்ஞராகிய சதுர்முகர்
Ulagum, உலகும் - (திருமழிசை தவிர மற்ற) எல்லா உலகங்களையும்
Mazhisaiyum, மழிசையும் - திருமழிசையையும்
Thammil ul unarnthu, தம்மில் உள் உணர்ந்து - தனித்தனியே தம் நெஞ்சில் ஆராய்ந்து (விஸ்வகர்மாவை கொண்டு)
Pugazh kolaal thookka, புகழ் கோலால் தூக்க - துலாக்கோல் நாட்டி நிறுப்பிக்க
Ulagu thannai vaithu edutha pakkathum, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் - உலகங்களை எல்லாம் வைத்து நிறுத்த தட்டிற்காட்டிலும்
Maa neer mazhisai vaithu edutha pakkame validhu, மா நீர் மழிசை வைத்து எடுத்த பக்கமே வலிது - சிறந்த நீர்வளம் மிக்க திருமழிசையை வைத்து நிறுத்த தட்டே வலிமிக்கதாயிருந்தது