| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | திருசந்தவிருத்தம் - தனியன் || (தருச்சந்தப் பொழில்) 16 | தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன்வருமூர் கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே | Tharu sandham Pozhil thazhuvu tharaniyin, தரு சந்தம் பொழில் தழுவு தாரணியின் - வ்ருக்ஷங்களினுடைய அழகையுடைய சோலைகளாலே சூழப்பட்ட பூமியிலே உள்ளவர்களுடைய Thuyar theera, துயர் தீர - துக்கம் தீரும்படியாக Thiruchandha virutham sei, திருச்சந்த விருத்தம் செய் - திருச்சந்த விருத்தம்' என்னும் திவ்யப்ரபந்தத்தைச் செய்தருளிய Thirumazhisai paran varum oor, திருமழிசை பரன் வரும் ஊர் - திருமழிசைப்பிரான் திருவவதரித்த திவ்யதேசம் எதுவென்றால் Karu sandhum, கரு சந்தும் - பெருமை பொருந்திய சந்தன மரங்களும் Kaar akilum, கார் அகிலும் - கறுத்த அகிற்கட்டைகளும் Kamazh kongum, கமழ் கோங்கும் - மணம் மிக்க கோங்கு மரங்களும் Manam naarum, மணம் நாறும் - பரிமளம் வீசப் பெற்றதாய் Thiru, திரு - பெரிய பிராட்டியார் Sandhathudan, சந்தத்துடன் - அபிநிவேசத்தோடு Maruvu, மருவு - பொருந்தி வாழப்பெற்றதான Thiru mazhisai valam pathiye, திரு மழிசை வளம் பதியே - திருமழிசை என்னும் செல்வம் மிக்க திருநகரியே யாம் |
| 0 | திருசந்தவிருத்தம் - தனியன் || (உலகும் மழிசையும்) 17 | உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்க்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே வைத் தெடுத்த பக்கம் வலிது | Pulavar, புலவர் - ஸர்வஜ்ஞராகிய சதுர்முகர் Ulagum, உலகும் - (திருமழிசை தவிர மற்ற) எல்லா உலகங்களையும் Mazhisaiyum, மழிசையும் - திருமழிசையையும் Thammil ul unarnthu, தம்மில் உள் உணர்ந்து - தனித்தனியே தம் நெஞ்சில் ஆராய்ந்து (விஸ்வகர்மாவை கொண்டு) Pugazh kolaal thookka, புகழ் கோலால் தூக்க - துலாக்கோல் நாட்டி நிறுப்பிக்க Ulagu thannai vaithu edutha pakkathum, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் - உலகங்களை எல்லாம் வைத்து நிறுத்த தட்டிற்காட்டிலும் Maa neer mazhisai vaithu edutha pakkame validhu, மா நீர் மழிசை வைத்து எடுத்த பக்கமே வலிது - சிறந்த நீர்வளம் மிக்க திருமழிசையை வைத்து நிறுத்த தட்டே வலிமிக்கதாயிருந்தது |