| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | திருமாலை- தனியன் || (மற்றொன்றும் வேண்டா மனமே) இதில் மநஸ்ஸைக்குறித்து, பகவத் விஷயத்தில் வாசிகமாக அடிமை செய்த ஆழ்வார் திருநாமத்தை நிரந்தர அநுஸந்தாநம் பண்ணும்படி சொல்லுகிறது. 18 | மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர் கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் - உற்ற திருமாலை பாடுஞ்சீர்த் தொண்டரடிப் பொடியெம் பெருமானை யெப்பொழுதும் பேசு | Maname, மனமே - என் நெஞ்சமே! Madhil Arangar, மதிள் அரங்கர் - ஸப்த ப்ராகாரங்களையுடைய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரும் Kanru inam, கன்று இனம் - பசுக்கூட்டங்களை Meitha, மேய்த்த - மேய்த்தவருமான எம்பெருமானுடைய Kazhal inai keezh, கழல் இணை கீழ் - இரு திருவடிகளிலும Utra, உற்ற - ஊன்றிய பக்தியையுடையவரும் Thirumaalai paadum, திருமாலை பாடும் - திருமாலை' என்னும் பிரபந்தத்தைப் பாடுமவரும் Seer, சீர் - கல்யாண குணங்கள் பொருந்தியவரும் Thondar adi podi, தொண்டர் அடி பொடி - தொண்டரடிப்பொடி என அழைக்கப்படுமவருமான Em Perumaanai, எம் பெருமானை - எங்களுடைய ஸ்வாமியை Epozhuthum, எப்பொழுதும் - எல்லாக்காலத்திலும் Pesu, பேசு - அநுஸந்தித்துப்போரு Matru ondrum, மற்று ஒன்றும் - வேறு ஒரு புருஷார்த்தமும் Venda, வேண்டா - வேண்டுவதில்லை |