| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | திருவெழுகூற்றிருக்கை - தனியன் || (சீரார் திருவெழுகூற்றிருக்கை) 46 | சீரார் திருவெழுகூற்றிருக்கை யென்னுஞ் செந்தமிழால் ஆராவமுதன் குடந்தைப் பிரான் தனடியிணைக்கீழ் ஏரார் மறைப் பொருளெல்லா மெடுத்திவ்வுல குய்யவே சேராமற் சொன்ன அருண் மாரி பாதம் துணை நமக்கே | Seer, சீர் - (சப்தார்த்தங்களினுடைய) குணங்களினாலே Aar, ஆர் - நிறைந்த Thiruvezhukootrirukkai ennum, திருவெழுகூற்றிருக்கை என்னும் - திருவெழுகூற்றிருக்கை என்று ப்ரஸித்தமாய் Sem, செம் - ஸுந்தரமான Tamizhaal, தமிழால் - த்ராவிட ரூபமான திவ்ய ப்ரபந்தத்தினால் Aaraa, ஆரா - த்ருப்தி பிறவாத Amudham, அமுதம் - அம்ருதம்போல் நிரதிசய போக்யனாய் Kudanthai, குடந்தை - திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கிற Piraan than, பிரான் தன் - உபகாரகனான ஸர்வேஸ்வரனுடைய Adiyinai keezh, அடியிணைக்கீழ் - ஸ்ரீபாதங்களின் கீழே (விஷயமாக) Er, ஏர் - (நிர்த்தோஷத்வமாகிற) அழகினால் Aar, ஆர் - பூர்ணமான Marai, மறை - வேதங்களினுடைய Porul ellaam, பொருள் எல்லாம் - அர்த்தங்கள் அனைத்தையும் Edutha, எடுத்த - உத்தரித்து Ivvulagu, இவ்வுலகு - இந்த லோகத்திலுள்ளார் Uyya, உய்ய - உஜ்ஜீவிக்கும்படி Soraamal, சோராமல் - (ஒன்றும்) நழுவாமல் Sonna, சொன்ன - அருளிச் செய்த Arulmaari, அருள்மாரி - திருமங்கையாழ்வாருடைய Paadham, பாதம் - திருவடிகளே Namakku, நமக்கு - நமக்கு Thunai, துணை - தஞ்சம் |