| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | நாச்சியார் திருமொழி- தனியன் || புதிதாக மலர்ந்த, இதழ்களையுடைய தாமரை மலரில் நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டியார் என்னும் தேவதையின் ப்ரிய தோழியாகவும், திருமல்லி நாட்டை ஆள்கின்ற அழகிய மயில் போன்றவளாகவும், ம்ருது ஸ்வபாவத்தை உடையவளுமான ஆண்டாள் நாச்சியார், இடையர் குல வேந்தனான கண்ணன் எம்பெருமானின் திருமேனிக்கு ஒத்தவளாகவும், அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலே அந்தணர் குலத்தலைவரான பெரியாழ்வார் பெற்றெடுத்த விளக்காகவும் திகழ்கின்றாள் 12 | அல்லி நாள் தாமரை மேலாரணங்கினின் துணைவி மல்லி நாடாண்ட மட மயில் - மெல்லியலாள் ஆயர் குல வேந்தனாகத்தாள் தென்புதுவை வேயர் பயந்த விளக்கு. | Alli, அல்லி - இதழ்களுடைய Naal Thaamarai mel, நாள் தாமரை மேல் - அப்போதலர்ந்த தாமரைப்பூவில் Aar, ஆர் - பொருந்தி யிராநின்ற Anangin, அணங்கின் - தெய்வப் பெண்ணான பெரிய பிராட்டியார்க்கு In thunaivi, இன் துணைவி - இஷ்டஸகியாயும் Malli naadu, மல்லி நாடு - மல்லிநாட்டை Aanda, ஆண்ட - (குணத்தாலே ஈடுபடுத்தி) ஆளாநின்ற Madam mayil, மடம் மயில் - அழகிய மயில் போன்றவளாயும் Mel iyalaal, மெல் இயலாள் - மென்மைத் தன்மையுடையவளுமான ஆண்டாள் Aayar kulam vendhan, ஆயர் குலம் வேந்தன் - இடைக் குலத்திற்குத் தலைவனான கண்ணபிரானுடைய Aagathaal, ஆகத்தாள் - திருமேனியிற் பொருத்தமுடையவளாயும் Then Pudhuvai veyar, தென் புதுவை வேயர் - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலே வேயாகுலத்துதித்தவரான பெரியாழ்வாராலே Payantha, பயந்த - பெறப்பட்ட Vilakku, விளக்கு - விளக்காயும் இராநின்றாள் |
| 0 | நாச்சியார் திருமொழி- தனியன் || அழகிய சுரியுடைய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தைப் பார்த்து ஆச்சர்ய செயல்களை உடைய எம்பெருமானின் சிவந்த திருவதரத்தின் சுவையை விசாரிக்கும் பெருமையை உடையவளும், அழகிய திருமல்லி நாட்டின் தலைவியும், தன்னுடைய அழகிய கூந்தலில் சூடிக்களைந்த பூமாலையைத் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பிக்கும்படியான மேன்மையை உடையவளும், சோலையில் இருக்கும் கிளி போன்றவளுமான ஆண்டாள் நாச்சியாரின் தூய்மையும் இனிமையும் பொருந்திய திருவடிகளே நமக்குப் புகலிடம். 13 | கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும் சீலத்தனள் * தென் திருமல்லி நாடி * செழுங்குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய சோலைக் கிளி * அவள் தூய நற்பாதம் துணை நமக்கே | Kolam surisangai, கோலம் சுரிசங்கை - அழகையும் சுரியையுமுடைய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை நோக்கி Maayan, மாயன் - கண்ண பிரானுடைய Sevvaayin gunam, செவ்வாயின் குணம் - சிவந்த திருவதரத்தின் அதிசயத்தை Vinavum seelathanal, வினவும் சீலத்தனள் - கேட்கும் தன்மை யுடையவளும் Then, தென் - தென் திசையிலுள்ள Thirumalli naadi, திருமல்லி நாடி - திருமல்லி நாட்டிற்குத் தலைவியும் Sezhum, செழும் - செழுமை தங்கிய Kuzhalmel, குழல்மேல் - ( தனது ) திருக்குழற்கற்றையில் (சூட்டப்பெற்ற) Maalai thodai, மாலைத் தொடை - கலம்பக மாலையை Then Arangarkku, தென் அரங்கருக்கு - அழகிய மணவாளனுக்கு Eeyum mathippu udaiya, ஈயும் மதிப்பு உடைய - ஸமர்ப்பிக்கும்படியான மேன்மையுடையவளும் Solai kili aval, சோலை கிளி அவள் - சோலையில் வளரும் கிளிபோல் இனிய மொழியையுடையவளுமான ஆண்டாளின் Thooya nal paadham, தூய நல் பாதம் - பாவனமும் போக்யமுமான திருவடிகள் Namakku, நமக்கு - நமக்கு Thunai, துணை - தஞ்சம் |