Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: நான்முகன் திருவந்தாதி - தனியன் (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0நான்முகன் திருவந்தாதி - தனியன் || (நாராயணன் படைத்தான்) 31
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தா னென்னும்சொல்- சீரார்
மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து
Narayanan, நாராயணன் - ஸ்ரீமந்நாராயணன்
Naanmuganai, நான்முகனை - நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மாவை
Padaithaan, படைத்தான் - ஸ்ருஷ்டித்தான்
Naanmuganukku, நான்முகனுக்கு - அப்பிரமனுக்கு
Er aar Sivan pirandhaan, ஏர் ஆர் சிவன் பிறந்தான் - ஸாதநாநுஷ்டாநத்தினால் பூர்ணனான சிவன் பிறந்தான்
Ennum sol, என்னும் சொல் - என்னும் இவ்வார்த்தையைச்சொல்லுவதாய்
Seer aar, சீர் ஆர் - பெருமைகள் பொருந்தப்பெற்றதான
Mozhi seppi, மொழி செப்பி - இப் பிரபந்தத்தைச் சொல்லி
Vaazhalam, வாழலாம் - வாழ்ச்சி பெறலாம்
Nenjame, நெஞ்சமே - என் நெஞ்சே!
Moi poo Mazhisai paran adiye, மொய் பூ மழிசை பரன் அடியே - பூக்கள் நிரம்பிய திருமழிசைப்பிரானுடைய திருவடிகளையே
Vaazhthu, வாழ்த்து - மங்களாசாஸனம் செய்வாயாக