Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பெரியதிருவந்தாதி - தனியன் (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0பெரியதிருவந்தாதி - தனியன் || (முந்துற்ற நெஞ்சே) (முந்துற்ற நெஞ்சித்யாதி, இதுபெரிய திருவந்தாதித் தனியனாகப் பெரியோர்களாலே அநுஸந்தித்துக்கொண்டு போருமதாயிருக்கும், ஆகையால் இதுவும் அந்த ஸப்தத்தை அநுவதித்தாயிற்றிருப்பது.(முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து) 'முயற்றி சுமந்தெழுந்து முந் துற்ற நெஞ்சே'' என்றது முன்பின்னாயிருக்கிறது) 34
முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே சந்த
முருகூருஞ்சோலசூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு
Mundhutra nenje, முந்துற்ற நெஞ்சே - ஆழ்வாரை ஆஸ்ரவிக்க என்னைக்காட்டிலும் முன் செல்லும் மனமே
Muyatri, முயற்றி - முயற்றி' என்று ஆரம்பித்துள்ள திவ்யப்ரபந்தத்தை
Tharithu, தரித்து - (புத்தியிலே) தரித்து
Uraithu, உரைத்து - (வாயாலே ) சொல்லி
Vanthithu, வந்தித்து - (ஆழ்வாரை) வணங்கி
Vazhthi, வாழ்த்தி - வாய் ஓயும் வரை மங்களாஸாஸனம் பண்ணி
Murugu oorum, முருகு ஊரும் - தேன் பெருகும்படியான
Sandham solai, சந்தம் சோலை - சந்தன மரங்களையுடைய சோலைகளாலே
Soozh, சூழ் - குழப் பட்டதாய்
Moy, மொய் - நீர் நிறைந்ததும்
Poo, பூ - அழகியதுமான
Porunal, பொருநல் - தாம்ரபரணி நதியையுடையதான
Kuru kooran, குரு கூரன் - திருநகரிக்கு ஸ்வாமியான
Maran per kooru, மாறன் பேர் கூறு - நம்மாழ்வாருடைய திருநாமத்தை அநுஸந்தித்துப் போரு