| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | பெருமாள் திருமொழி - தனியன் || (இன்னமுதமூட்டுகேன்) 14 | இன்னமுதமூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே தென்னரங்கம் பாட வல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர் கோன் எங்கள் குலசேகரன் என்றே கூறு | Paing kiliye, பைங் கிளியே - பசுமைதங்கிய கிளியே! In amudham ootuken, இன் அமுதம் ஊட்டுகேன் - (உனக்கு) இனிமையான அம்ருதம் உண்ணத் தருகிறேன் Inge vaa, இங்கே வா - என்னருகே வருவாயாக Then arangam, தென் அரங்கம் - தென் திருவரங்கத்தைக் குறித்து Paada valla, பாட வல்ல - (இனிய கவிகளை) அருளிச் செய்யவல்ல Seer, சீர் - கல்யாண குணசாலியான Perumal, பெருமாள் - மஹாநுபாவர் Pon am silai ser, பொன் அம் சிலை சேர் - விரும்பத்தக்கதாய் அழகியதான புருவத்தை நெற்றியிலேயுடைய Nuthaliyar vel, நுதலியர் வேள் - மாதர்கட்கு மநோஹாரானவர் Seralar kon, சேரலர் கோன் - சேர வம்சத்தவர்களுக்கெல்லாம் ராஜா Engal Kulasekaran, எங்கள் குலசேகரன் - ப்ரபந்நரான நம்முடைய குலத்துக்குச் சிரோபூஷணமான குலசேகராழ்வார் Endre kooru, என்றே கூறு - என்று இதையே நீ வாய்பிதற்ற வேணும் |
| 0 | பெருமாள் திருமொழி - தனியன் || (ஆரம் கெடப்பரனன்பர்) 15 | ஆரம் கெடப்பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங் கொடு குடப்பாம்பில் கையிட்டவன் மாற்றலரை வீரங் கெடுத்த செங்கோற் கொல்லி காவலன் வில்லவர் கோன் சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே | Aaram keda, ஆரம் கெட - நவரத்தின மாலையொன்று கெட்டுப்போக (அதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்ததாகக் கள்ள மந்திரிகள் கூற) Avargalukke vaaram kodu, அவர்களுக்கே வாரம் கொடு - அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷயத்திலே பக்ஷபாதம் பூண்டு Paran enbar kollaar endru, பரன் என்பர் கொள்ளார் என்று - பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்யமாட்டார்கள் என்று சொல்லி Kudappaambil kai ittavan, குடப்பாம்பில் கை இட்டவன் - பாம்புக்குடத்தில் கையிட்டருளியவர் Maatralarai, மாற்றலரை - சத்துருக்களை Veeram keduthu kelkol, வீரம் கெடுத்து கெல்கோல் - பரிபவப்படுத்திய செங்கோன்மையை உடையவரும் Kolli kaavalan, கொல்லி காவலன் - கொல்லி என்கிற நகருக்கு நிர்வாஹகரும் Villavar kon, வில்லவர் கோன் - தநுர்வித்யை பயின்றவர்களில் தலைவரும் Seran, சேரன் - சேரதேசத்து அரசரும் Mudi vendhar sigamani, முடி வேந்தர் சிகாமணி - முடியுடை மன்னர்களிற் சிறந்தவருமான Kulasekaran, குலசேகரன் - குலசேகராழ்வாராவர் |