Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பெருமாள் திருமொழி - தனியன் (2 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0பெருமாள் திருமொழி - தனியன் || (இன்னமுதமூட்டுகேன்) 14
இன்னமுதமூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு
Paing kiliye, பைங் கிளியே - பசுமைதங்கிய கிளியே!
In amudham ootuken, இன் அமுதம் ஊட்டுகேன் - (உனக்கு) இனிமையான அம்ருதம் உண்ணத் தருகிறேன்
Inge vaa, இங்கே வா - என்னருகே வருவாயாக
Then arangam, தென் அரங்கம் - தென் திருவரங்கத்தைக் குறித்து
Paada valla, பாட வல்ல - (இனிய கவிகளை) அருளிச் செய்யவல்ல
Seer, சீர் - கல்யாண குணசாலியான
Perumal, பெருமாள் - மஹாநுபாவர்
Pon am silai ser, பொன் அம் சிலை சேர் - விரும்பத்தக்கதாய் அழகியதான புருவத்தை நெற்றியிலேயுடைய
Nuthaliyar vel, நுதலியர் வேள் - மாதர்கட்கு மநோஹாரானவர்
Seralar kon, சேரலர் கோன் - சேர வம்சத்தவர்களுக்கெல்லாம் ராஜா
Engal Kulasekaran, எங்கள் குலசேகரன் - ப்ரபந்நரான நம்முடைய குலத்துக்குச் சிரோபூஷணமான குலசேகராழ்வார்
Endre kooru, என்றே கூறு - என்று இதையே நீ வாய்பிதற்ற வேணும்
0பெருமாள் திருமொழி - தனியன் || (ஆரம் கெடப்பரனன்பர்) 15
ஆரம் கெடப்பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடு குடப்பாம்பில் கையிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்த செங்கோற் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே
Aaram keda, ஆரம் கெட - நவரத்தின மாலையொன்று கெட்டுப்போக (அதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்ததாகக் கள்ள மந்திரிகள் கூற)
Avargalukke vaaram kodu, அவர்களுக்கே வாரம் கொடு - அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷயத்திலே பக்ஷபாதம் பூண்டு
Paran enbar kollaar endru, பரன் என்பர் கொள்ளார் என்று - பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்யமாட்டார்கள் என்று சொல்லி
Kudappaambil kai ittavan, குடப்பாம்பில் கை இட்டவன் - பாம்புக்குடத்தில் கையிட்டருளியவர்
Maatralarai, மாற்றலரை - சத்துருக்களை
Veeram keduthu kelkol, வீரம் கெடுத்து கெல்கோல் - பரிபவப்படுத்திய செங்கோன்மையை உடையவரும்
Kolli kaavalan, கொல்லி காவலன் - கொல்லி என்கிற நகருக்கு நிர்வாஹகரும்
Villavar kon, வில்லவர் கோன் - தநுர்வித்யை பயின்றவர்களில் தலைவரும்
Seran, சேரன் - சேரதேசத்து அரசரும்
Mudi vendhar sigamani, முடி வேந்தர் சிகாமணி - முடியுடை மன்னர்களிற் சிறந்தவருமான
Kulasekaran, குலசேகரன் - குலசேகராழ்வாராவர்