| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | முதல் திருவந்தாதி - தனியன் || (கைதைசேர்) 28 | கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு வையத் தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற் றந்தாதி படிவிளங்கச் செய்தான் பரிந்து | Kaithai, கைதை - தாழைகள் Ser, சேர் - நெருங்கிவர்த்திக்கிற Poo, பூ - அழகிய Pozhil, பொழில் - சோலைகளாலே Soozh, சூழ் - சூழப்பட்ட Kachi nagar, கச்சி நகர் - காஞ்சீநகரத்தில் (திருவெஃகாவிலே) Vandhudiththa, வந்துதித்த - (பொற்றாமரைப் பொய்கையிலே) திருவவதரித்தவராய் Kavingar poreru, கவிஞர்போரேறு - கவி ச்ரேஷ்டராய் Poigai piran, பொய்கைப் பிரான் - உபகாரகரான பொய்கையாழ்வார் Vaiyathu, வையத்து - பூமியிலுள்ள Adiyavargal, அடியவர்கள் - தாஸபூதரான ஸ்ரீவைஷ்ணவர்கள் Vaazha, வாழ - வாழும்படிக்கீடாக Arum, அரும் - (அர்த்த நிர்ணயம் செய்யப்புகில்) அரிதாய் Tamizh, தமிழ் - தமிழாகையாலே ஸுலபமாய் Nootranthaadhi, நூற்றந்தாதி - நூறுபாட்டாயிருக்கிற அந்தாதியை Parinthu, பரிந்து - ஸ்நேஹ யுக்தராய்க்கொண்டு Padi, படி - பூமியிலே Vilanga seidhaan, விளங்கச்செய்தான் - ப்ரகாசமாகும்படி செய்தருளினார் |