| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | மூன்றாம் திருவந்தாதி - தனியன் || (சீராரும்மாட) (மநஸ்ஸே ! ஸம்பத்தினால் நிறைந்தும் மண்டபங்களையுடையதுமான திருக்கோவலூரென்கிற திவ்யதேசத்திற்குள் ஜலத்தினால் நிறைந்து கறுத்திருக்கிற மேகம் போன்ற திருமேனியையுடைய ஸர்வேஸ்வரனை அநுபவிக்கத் தொடங்கி ஆராய்ந்து திருக்கண்டேனென்று தொடக்கமான திருவந்தாதியை அருளிச் செய்த ஸ்ரீமானான பேயாழ்வாருடைய திருவடிகளை ஆசைப்பட்டு சொல்லுகிடாய்) 30 | சீராரும்மாடத் திருக்கோவலூரதனுள் காரார்கருமுகிலைக் காணப்புக்கு - ஓராத் திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே உரைக்கண்டாய்நெஞ்சே யுகந்து | Nenje, நெஞ்சே - எனது நெஞ்சமே! Seer aarum maadam, சீர் ஆரும் மாடம் - அழகு பொருந்திய மாடங்களையுடைய Thirukkovalur adhanul, திருக்கோவலூர் அதனுள் - திருக்கோவலூரில் ஓர் இடைகழியில் Kaar aar karu mugilai, கார் ஆர் கரு முகிலை - கார்காலத்துக் கரிய மேகம் போன்ற எம்பெருமானை Kaanapukku, காண புக்கு - ஸேவிக்கப் புகுந்து Oraa, ஓரா - நெஞ்சென்னும் உட்கண்ணாலே அநுஸந்தித்து Thirukkanden endru uraitha, திருக்கண்டேன் என்று உரைத்த - திருக் கண்டேன்' என்று தொடங்கி நூறுபாசுரம் அருளிச்செய்த Seeraan, சீரான் - சீர்மை பொருந்திய பேயாழ்வாருடைய Kazhale, கழலே - திருவடிகளையே Ugandhu urai kandai, உகந்து உரைக்கண்டாய் - மகிழ்ந்து பேசு |