Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 100 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
100ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 4
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன
தேறி அவளும் திரு வுடம்பில் பூச
ஊறிய கூனினை உள்ளே யொடுங்க அன்று
ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ வச்சோ–1-8-4
நாறிய,Naariya - ‘நல்ல வாசனை வீசுகின்ற
சாந்தம்,Santham - சந்தனத்தை
நமக்கு,Namakku - எங்களுக்கு
இறை,Irai - கொஞ்சம்
நல்கு என்ன,Nalku enna - கொடு என்று (நீ) கூனியைக் கேட்க
அவளும்,Avalum - அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்)
தேறி,Theri - மனம் தெளிந்து
திரு உடம்பில்,Thiru udambil - (உனது) திருமேனியிலே
பூச,Poosa - சாத்த
ஊறிய,Ooriya - வெகுநாளாயிருக்கிற
கூனினை,Kooninai - (அவளுடைய) கூனை
உள்ளே,Ulle - (அவள்) சரீரத்திற்குள்ளே
ஒடுங்க,Odunga - அடங்கும்படி
அன்று,Andru - அக் காலத்திலே
ஏற,Era - நிமிர்த்து
உருவினாய்,Uruvinai - உருவினவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.,Emperumaan! vandhu achcho achcho - எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.