| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 100 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 4 | நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன தேறி அவளும் திரு வுடம்பில் பூச ஊறிய கூனினை உள்ளே யொடுங்க அன்று ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ வச்சோ–1-8-4 | நாறிய,Naariya - ‘நல்ல வாசனை வீசுகின்ற சாந்தம்,Santham - சந்தனத்தை நமக்கு,Namakku - எங்களுக்கு இறை,Irai - கொஞ்சம் நல்கு என்ன,Nalku enna - கொடு என்று (நீ) கூனியைக் கேட்க அவளும்,Avalum - அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்) தேறி,Theri - மனம் தெளிந்து திரு உடம்பில்,Thiru udambil - (உனது) திருமேனியிலே பூச,Poosa - சாத்த ஊறிய,Ooriya - வெகுநாளாயிருக்கிற கூனினை,Kooninai - (அவளுடைய) கூனை உள்ளே,Ulle - (அவள்) சரீரத்திற்குள்ளே ஒடுங்க,Odunga - அடங்கும்படி அன்று,Andru - அக் காலத்திலே ஏற,Era - நிமிர்த்து உருவினாய்,Uruvinai - உருவினவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.,Emperumaan! vandhu achcho achcho - எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ. |