| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 101 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 5 | கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ–1-8-5 | கழல்,Kalal - வீரக் கழலை யணிந்த மன்னர்,Mannar - ராஜாக்கள் சூழ,Sool - தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்) கதிர்போல்,Kathirpol - ஸூரியன்போல விளங்கி,Vilangi - ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை எழல் உற்று,Ezhal utru - (ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளையிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)(முதலில்) எழுந்திருந்து மீண்டு,Meendu - மறுபடியும் இருந்து,Irundhu - (தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு உன்னை,Unnai - உன்னை நோக்கும்,Nokkum - (பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த பெரிது கழலை உடை,Perithu kalalai udai - மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய துச்சோதனனை,Thuchchodhananai - துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி) அழல விழித்தானே,Azhal vizhiththane - உஷ்ணமாகப் பார்த்தவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை அம் கையனே,Am kaiyane - அழகிய கையிலேந்தியவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |