| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 102 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 6 | போரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான் தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் காரொக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ–1-8-6 | இ பூமி, E poomi - இந்தப் பூமியினுடைய பொறை,Porai - பாரத்தை தீர்ப்பான்,Theerppan - தீர்ப்பதற்காக போர்,Por - யுத்தத்தை ஒக்க,Okka - (துர்யோதநாதிகளோடு) ஸமமாக பண்ணி,Panni - செய்து செழு,Sezhu - செழுமைதாங்கிய தார்,Thar - மாலையை யுடைய விசயற்கு ஆய்,Vijayarku aay - அர்ஜுநனுக்காக தேர்,Ther - (அவனுடைய) தேரை ஒக்க,Okka - (எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி ஊர்ந்தாய்,Oorndhai - பாகனாய்ச் செலுத்தினவனே! கார் ஒக்கும்,Kaar okkum - மேகத்தோடு ஒத்த மேனி,Meni - திருமேனியில் கரும்பெருங் கண்ணனே,Karumperum kannane - கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே! வந்து,Vandhu - ஓடிவந்து ஆர,Aara - நின்றாக தழுவா,Thazhuvaa - தழுவிக்கொண்டு அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற) போர் ஏறே,Por ere - போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |