Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 102 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
102ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 6
போரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான்
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ–1-8-6
இ பூமி, E poomi - இந்தப் பூமியினுடைய
பொறை,Porai - பாரத்தை
தீர்ப்பான்,Theerppan - தீர்ப்பதற்காக
போர்,Por - யுத்தத்தை
ஒக்க,Okka - (துர்யோதநாதிகளோடு) ஸமமாக
பண்ணி,Panni - செய்து
செழு,Sezhu - செழுமைதாங்கிய
தார்,Thar - மாலையை யுடைய
விசயற்கு ஆய்,Vijayarku aay - அர்ஜுநனுக்காக
தேர்,Ther - (அவனுடைய) தேரை
ஒக்க,Okka - (எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி
ஊர்ந்தாய்,Oorndhai - பாகனாய்ச் செலுத்தினவனே!
கார் ஒக்கும்,Kaar okkum - மேகத்தோடு ஒத்த
மேனி,Meni - திருமேனியில்
கரும்பெருங் கண்ணனே,Karumperum kannane - கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே!
வந்து,Vandhu - ஓடிவந்து
ஆர,Aara - நின்றாக
தழுவா,Thazhuvaa - தழுவிக்கொண்டு
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற)
போர் ஏறே,Por ere - போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;