| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 103 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 7 | மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கது அன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ–1-8-7 | மிக்க பெரும்புகழ்,Mikka perumpugazh - (ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய மா வலி,Maa vali - மஹாபலி (செய்த) வேள்வியில்,Velviyil - யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொöடுக்க முயன்ற வளவிலே) இது,Ithu - நீ கொடுக்கிற விது தக்கது அன்று,Thakkathu andru - தகுதியானதன்று’ என்று,Endru - என்று முறையிட்டு தானம்,Thaanam - பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்) விலக்கிய,Vilakkiya - தடுத்த சுக்கிரன்,Sukiran - சுக்கிராச்சாரியனுடைய கண்ணை,Kannai - ஒரு கண்ணை துரும்பால்,Thurumpaal - (உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால் கிளறிய,Kilarriya - கலக்கின சக்கரம் கையனே,Chakkaram kaiyane - சக்ராயுதமேந்திய கையை யுடையவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; சங்கம்,Sangam - பாஞ்ச ஜன்யத்தை இடத்தானே,Idaththane - இடக்கையிலேந்தினவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |