| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 104 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 8 | என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–1-8-8 | இது,Ithu - (வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து) (யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது என் மாயம்,En maayam - என்ன மாயச் செய்கை!; என் அப்பன்,En appan - என் தகப்பன் அறிந்திலன்,Arinthilan - (நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை முன்னைய வண்ணமே கொண்டு,Munnaiya vanname kondu - நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு அளவாய்,Alavaay - அளப்பாயாக என்ன,Enna - என்று சொல்ல மன்னு,Mannu - (இப்படி) பிடிவாதமாய் நின்ற நமுசியை,Namusiyai - (அந்த) நமுசி யென்பவனை வானில்,Vaanil - ஆகாசத்திலே சுழற்றிய,Suzharriya - சுழலச் செய்த மின்னு முடியனே,Minnu mudiyane - விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ-; வேங்கடம்,Vengadam - திருமலையிலே வாணனே,Vaanane - வாழுமவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |