| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 105 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 9 | கண்ட கடலும் மலையும் உலகேழும் முண்டத்துக் காற்றா முகில் வண்ணா ஓ ஒ வென்று இண்டைச் சடை முடி ஈசன் இரக்கொள்ள மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ–1-8-9 | கண்ட,Kanda - கண்ணாற்கண்ட கடலும்,Kadalum - ஸமுத்ரங்களும் மலையும்,Malayum - மலைகளும் உலகு ஏழும்,Ulaku ezhum - கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்) முண்டத்துக்கு,Mundaththukku - (என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு ஆற்றா,Aatraa - போதாவாம்; முகில் வண்ணா,Mugil vanna - மேக வண்ணனே! ஓஒ!,Ooo - ஓஒ! (ஹாஹா!) என்று,Endru - என்று கூப்பிட்டு இண்டை,Indai - நெருங்கின சடை முடி,Sadai mudi - ஜடா பந்தத்தை யுடைய ஈசன்,Eesan - சிவன் இரக்கொள்ள,Irakkolla - பிச்சை யெடுக்க மண்டை,Mandai - (அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை நிறைத்தானே,Niraiththane - (மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ மார்வில்,Maarvil - திரு மார்பிலே மறுவனே,Maruvane - ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |