Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 106 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
106ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 10
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்ன மதானானே அச்சோ வச்சோ அரு மறை தந்தானே அச்சோ வச்சோ-1-8-10
மன்னிய,Manniya - நித்ய ஸித்தமான
நால் மறை,Naal marai - சதுர் வேதங்களும்
முற்றும்,Mutrum - முழுவதும்
மறைந்திட,Maraindhida - மறைந்து விட (அதனால்)
அன்னிய,Anniya - நெருங்கிய
பேர் இருள்,Per irul - பெரிய அஜ்ஞாநாந்தகாரம்
சூழ்ந்து,Soozhndhu - பரவி
உலகை,Ulakai - லோகங்களை
மூட,Mooda - மறைத்துக் கொள்ள
பின்,Pin - பின்பு
உலகினில்,Ulakinil - இந்த லோகங்களில்
பேர் இருள்,Per irul - (அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது
நீங்க,Neenga - நீங்கும்படி
என்று,Endru - அக் காலத்தில்
அன்னம் அது ஆனானே,Annam adhu aanane - ஹம்ஸமாய் அவதரித்தவனே!
அரு மறை தந்தானே,Aru marai thanthane - (அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ