| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 107 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 11 | நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல் நச்சலும் பாடுவார் நீள் விசும்பாள்வரே–1-8-11 | நச்சுவார் முன்,Nachchuvaar mun - (தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே நிற்கும்,Nirkum - வந்து நிற்குந் தன்மையுள்ள நாராயணன் தன்னை,Narayanan thannai - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை ஆய்ச்சி,Aaychchi - இடைக் குலத்தவளான யசோதை அச்சோ வருக என்று உரைத்தன,Achcho varuga endru uraiththana - (அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி) ‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை மச்சு அணி,Machchu ani - பல நிலைகளால் அழகிய மாடம்,Maadam - மாளிகைகளை யுடைய புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattan - பெரியாழ்வார் சொல்,Sol - சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும் பாடுவார்,Paaduvaar - பாடுபவர்கள் நிச்சலும்,Nichchalum - எப்போதும் நீள் விசும்பு,Neel visumbu - பரமாகாசமாகிற பரமபதத்திற்கு ஆள்வர்,Aalvar - நிர்வாஹகராவர். |