Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 107 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
107ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 11
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன
மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல்
நச்சலும் பாடுவார் நீள் விசும்பாள்வரே–1-8-11
நச்சுவார் முன்,Nachchuvaar mun - (தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே
நிற்கும்,Nirkum - வந்து நிற்குந் தன்மையுள்ள
நாராயணன் தன்னை,Narayanan thannai - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
ஆய்ச்சி,Aaychchi - இடைக் குலத்தவளான யசோதை
அச்சோ வருக என்று உரைத்தன,Achcho varuga endru uraiththana - (அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி) ‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை
மச்சு அணி,Machchu ani - பல நிலைகளால் அழகிய
மாடம்,Maadam - மாளிகைகளை யுடைய
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattan - பெரியாழ்வார்
சொல்,Sol - சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும்
பாடுவார்,Paaduvaar - பாடுபவர்கள்
நிச்சலும்,Nichchalum - எப்போதும்
நீள் விசும்பு,Neel visumbu - பரமாகாசமாகிற பரமபதத்திற்கு
ஆள்வர்,Aalvar - நிர்வாஹகராவர்.