| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 109 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 2 | கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில் கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர் கட்டி தன் கணத் தாலே சதிரா நடந்து வந்து என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்-1-9-2 | என் கண்ணன்,En kannan - என் கண்ணபிரான் கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கையை கட்டி,Katti - கட்டிக் கொண்டும் கிறி,Kiri - சிறுப் பவள வடத்தை கையினிலே,Kaiyinilae - கையிலே கட்டி,Katti - கட்டிக் கொண்டும் கங்கணம்,Kanganam - தோள் வளையை இட்டு,Ittu - (தோள்களில்) சாத்திக் கொண்டும் கழுத்தில்,Kazhuththil - திருக் கழுத்திலே தொடர்,Thodhar - சங்கிலியை கட்டி,Katti - அணிந்து கொண்டும் தம் கணத்தாலே,Tham kanaththale - (இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட சதிர் ஆ நடந்து வந்து,Sathir aa nadandhu vandhu - அழகாக நடந்து வந்து என்னை புறம் புல்குவான்-;,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |