| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 110 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 3 | கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான் கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்களேறு என் புறம் புல்குவான்–1-9-3 | கத்தக் கதித்து கிடந்த,Kattak kathiththu kidantha - மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த பெருஞ்செல்வம்,Perunchelvan - மிகுந்த ஐச்வர்யத்தை ஒத்து,Othu - (தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து பொருந்திக் கொண்டு,Porundhik kondu - மனம் பொருந்தி யிருக்க உண்ணாது,Unnaadhu - அநுபவியாமல் மண்,Man - பூமியை ஆள்வான்,Azhvaan - (தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான கொத்து தலைவன்,Kothu thalaivan - (தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன் குடி கெட,Kudi keda - (தன்) குடும்பத்தோடு பாழாம்படி தோன்றிய,Thonriya - திருவவதரித்த அத்தன்,Atthan - ஸ்வாமி வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு,Aayarkal aaru - இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான் என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |