Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 110 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
110ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 3
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்களேறு என் புறம் புல்குவான்–1-9-3
கத்தக் கதித்து கிடந்த,Kattak kathiththu kidantha - மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த
பெருஞ்செல்வம்,Perunchelvan - மிகுந்த ஐச்வர்யத்தை
ஒத்து,Othu - (தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து
பொருந்திக் கொண்டு,Porundhik kondu - மனம் பொருந்தி யிருக்க
உண்ணாது,Unnaadhu - அநுபவியாமல்
மண்,Man - பூமியை
ஆள்வான்,Azhvaan - (தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான
கொத்து தலைவன்,Kothu thalaivan - (தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்
குடி கெட,Kudi keda - (தன்) குடும்பத்தோடு பாழாம்படி
தோன்றிய,Thonriya - திருவவதரித்த
அத்தன்,Atthan - ஸ்வாமி
வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்
ஆயர்கள் ஏறு,Aayarkal aaru - இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான்
என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்