| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 111 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 4 | நாந்தக மேந்திய நம்பி சரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-4 | நாந்தகம்,Nanthagam - நந்தகம் என்னும் வாளை ஏந்திய,Aendhiya - கையிலணிந்துள்ள நம்பி,Nambi - பெரியோனே! சரண்,Saran - (நீ எனக்கு) ரக்ஷகன் என்று,Endru - என்று சொல்லி தாழ்ந்த,Thaazhntha - (தன்னை) வணங்கிய தனஞ்சயற்கு ஆகி,Thananjayarku aagi - அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து தரணியில்,Tharaniyil-ib bhoomiyile - இப் பூமியிலே வேந்தர்கள்,Vendarhal - (எதிரிகளான) ராஜாக்கள் உட்க,Utka - அஞ்சிக் கலங்கும்படி விசயன்,Vichayan-anda Arjunanathu - அந்த அர்ஜுநனது மணி திண் தேர்,Mani thin ther - அழகிய வலிய தேரை ஊர்ந்தவன்,Oornthavan - (ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன் என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு கோன்,Kon - நிர்வாஹகனான இவன் என்னை புறம் புல்குவான்,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |