| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 112 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 5 | வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி கண் பல செய்த கருந்தழைக் காவின் கீழ் பண்பல பாடிப்பல்லாண் டிசைப்ப பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான்–1-9-5 | பண்டு,Pandu - முன்னொரு காலத்திலே வெண்கலம் பத்திரம்,Venkalam paththiram - வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை கட்டி,Katti - (அரையிற்) கட்டிக் கொண்டு விளையாடி,Vilaiyaadi - விளையாடி பல கண் செய்த,Pala kan seitha - பல பீலிக் கண்களைக் கொண்டு செய்யப்பட்ட கரு தழை,Karu thazhai - பெரிய குடையாகிற காவின் கீழ்,Kaavin keezh - சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று) பல பண் பாடி,Pala pan paadi - (அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு பல்லாண்டு இசைப்ப,Pallandu isaippa - மங்களாசாஸநம் செய்ய பல மண் கொண்டான்,Pala man kondaan - பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன் புறம் புல்குவான்,Puram pulkuvan - வாமனன் என்னை புறம் புல்குவான் |