| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 114 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 7 | பொத்த வுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறார விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்–1-9-7 | பொத்த உரலை,Potta uralai - (அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (கொண்டு வந்து) கவிழ்த்து,Kavizhththu - தலை கவிழ்த்துப் போட்டு அதன் மேல் ஏறி,Adhan mel aeri - அவ் வுரவின் மேலேறி தடாவினில்,Thadavinil - மிடாக்களிலே உள்ள தித்தித்த பாலும்,Thiththitha paalum - மதுரமான பாலையும் வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும் திரு வயிறு ஆர்,Thiru vayiru aar - வயிறு நிரம்ப மெத்த விழுங்கிய,Meththa vizhunkiya - மிகுதியாக விழுங்கின அத்தன்,Atthan - தலைவன் வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - வந்து என்னை புறம் புல்குவான்-; ஆழியான்,Aazhiyaan - (இப்படிக் களவு கண்டு உண்கையில்) ஆழ்ந்து தேறியவன் என்னை புறம் புல்குவான்-.,Ennai puram pulkuvan - என்னை புறம் புல்குவான்-. |