திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 117 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
117பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (பெரியாழ்வார் தாம் அநுபவித்து ஸந்தோஷித்து உலகத்தார்க்கு உபகரித்த தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள் மங்களாசாஸநத்தில் விருப்பம் பொருந்தி நல்ல புத்திரர்களை அடைந்து ஆநந்திப்பர்கள்) 10
ஆய்ச்சி யன்றாழிப் பிரான் புறம் புல்கிய வேய்த் தடந் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே–1-9-10
பதவுரை Show / Hide
வேய்,Vey - மூங்கில் போன்ற
தடந்,Tadan - பெரிய
தோளி,Tholi - தோள்களை யுடையனான
ஆய்ச்சி,Aaychi - யசோதை யானவன்
ஆழிப் பிரான்,Aazhi piran - சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன்
அன்று,Andru - அக் காலத்திலே
புறம் புல்கிய,Puram pulgiya - புறம் புல்குவதைக் கூறிய
சொல்,Sol - சொல்லை
விட்டு சித்தன்,Vittu chiththan - பெரியாழ்வார்
மகிழ்ந்து,Magizhndhu - (தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து
ஈந்த,Eintha - (உலகத்தார்க்கு) உபகரித்த
தமிழ் இவை ஈர் ஐந்தும்,Tamil ivai eer aindhum - தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள்
வாய்த்த,Vaaytha - (மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி
நல் மக்களை,Nal makkalai - நல்ல புத்திரர்களை
பெற்று,Petru - அடைந்து
மகிழ்வர்,Magizhvar - ஆநந்திப்பர்கள்.