| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 118 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 1 | மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1 | மெச்ச,Mecha - (அனைவரும்) கொண்டாடும்படி ஊது,Oodu - ஊதுகின்ற சங்கம்,Sangam - பாஞ்சஜந்யத்தை மிடத்தான்,Midathaan - இடக்கையில் ஏந்தியுள்ளவனும் நல்வேய்,Nalvey - நல்ல வேய்ங்குழலை ஊதி,Oodi - ஊதுபவனும் பொய் சூதில்,Poi soodhil - க்ருத்ரிமமான சூதிலே தோற்ற,Thotra - (தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய் பொறை உடை,Porai udai - பொறுமைசாலிகளான மன்னர்க்கு,Mannarkku - பாண்டவர்கட்கு ஆய்,Aay - (தான் எல்லாவகைத்) துணையுமாயிருந்து பத்து ஊர்,Pathu oor - (துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்) ஊரையும் பெறாது,Peraadhu - அடைய முடியாமல் அன்று,Andru - அக் காலத்திலே பாரதம்,Baaratham - பாரத யுத்தத்தை கை செய்த,Kai seitha - அணி வகுத்துச் செய்து அ தூதன்,A thoodhan - அந்தப் பாண்டவ தூதனான கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appoochi kaattuginraan - அப்படிப்பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்; அம்மனே,Ammaney - அம்மா! அப்பூச்சி காட்டுகின்றான்-.,Appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |