| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 119 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 2 | மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-2 | மலை புரை,Malai purai - மலையை ஒத்த தோள்,Thol - தோள்களை யுடைய மன்னவர்,Mannavar - அரசர்களான மாரதரும்,Maaratharum - மஹா ரதரும் மற்றும் பலரும்,Matrum palarum - மற்றும் பலவகை அரசர்களும் குலைய,Kulaiya - அழியவும் நூற்றுவரும்,Noorruvarum - (துர்யோதநாதிகள்) நூறு பேரும் பட்டு,Pattu - மரணமடைந்து அழிய,Azhiya - உருவமழிந்து போகவும் பார்த்தன்,Paarthan - அர்ஜுனனுடைய சிலை,Silai - (காண்டீவமென்னும்) வில் வளைய,Valaiya - வளையவும் திண் தேர் மேல்,Thin ther mel - (அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல் முன் நின்ற,Mun ninra - (ஸாரதியாய்) முன்புறத்தில் நின்ற செம் கண்,Sem kan - (வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய் அல வலை,Ala valai - (அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |