Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 120 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
120ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 3
காயும் நீர் புக்குக் கடம்பேறி காளியன்
தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயிங் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-3
காயும்,Kaayum - (காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற
நீர்,Neer - மடுவின் ஜலத்திலே
புக்கு,Pukku - புகுந்து (கலக்கி) (அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)
கடம்பு ஏறி,Kadambu eri - (அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி
காளியன்,Kaaliyan - அந்தக் காளியனுடைய
தீய பணத்தில்,Theeya panathil - கொடிய படத்திலே
சிலம்பு ஆர்க்க,Silambu aarka - (தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி
பாய்ந்து,Paayndhu - குதித்து
ஆடி,Aadi - கூத்தாடி
வேயின் குழல் ஊதி,Veyin kuzhal oodi - (இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ) மூங்கினாலானாகிய குழலை ஊதி
வித்தகன் ஆய் நின்ற,Vithagan aay ninra - (இப்படி) விஸ்மயரீயனாயிருந்த
ஆயன்,Aayan - கண்ணபிரான்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-.