| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 120 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 3 | காயும் நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயிங் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-3 | காயும்,Kaayum - (காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற நீர்,Neer - மடுவின் ஜலத்திலே புக்கு,Pukku - புகுந்து (கலக்கி) (அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து) கடம்பு ஏறி,Kadambu eri - (அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி காளியன்,Kaaliyan - அந்தக் காளியனுடைய தீய பணத்தில்,Theeya panathil - கொடிய படத்திலே சிலம்பு ஆர்க்க,Silambu aarka - (தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி பாய்ந்து,Paayndhu - குதித்து ஆடி,Aadi - கூத்தாடி வேயின் குழல் ஊதி,Veyin kuzhal oodi - (இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ) மூங்கினாலானாகிய குழலை ஊதி வித்தகன் ஆய் நின்ற,Vithagan aay ninra - (இப்படி) விஸ்மயரீயனாயிருந்த ஆயன்,Aayan - கண்ணபிரான் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |