| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 121 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 4 | இருட்டில் பிறந்து போய் ஏழை வல் லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப் புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-4- | இருட்டில்,Iruttil - இருள் நிறைந்த நடு நிசியில் பிறந்த,Pirandha - (மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி போய்,Poi - (அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய் ஏழை,Ezhai - அவிவேகிகளான வல்,Val - (தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய ஆயர்,Aayar - இடையர்களின் மருட்டை,Maruttai - (கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக் கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற) மருள் வார்த்தைகளை தவிர்ப்பித்து,Thavirppithu - போக்கினவனாயும் வல் கஞ்சன்,Val kanjan - கொடிய கம்ஸன் மாள,Maala - மாண்டு போம்படி புரட்டி,Puratti - (அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும் அ நாள்,A naal - (நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே எங்கள்,Engal - எங்களுடைய பூ பட்டு,Poo pattu - அழகிய பட்டுப் புடவைகளை கொண்ட,Konda - வாரிக் கொண்டு போன அரட்டன்,Arattan - தீம்பனாயுமுள்ள கண்ணன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |