திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 121 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
121பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 4
இருட்டில் பிறந்து போய் ஏழை வல் லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப் புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-4-
பதவுரை Show / Hide
இருட்டில்,Iruttil - இருள் நிறைந்த நடு நிசியில்
பிறந்த,Pirandha - (மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி
போய்,Poi - (அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய்
ஏழை,Ezhai - அவிவேகிகளான
வல்,Val - (தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய
ஆயர்,Aayar - இடையர்களின்
மருட்டை,Maruttai - (கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற) மருள் வார்த்தைகளை

தவிர்ப்பித்து,Thavirppithu - போக்கினவனாயும்
வல் கஞ்சன்,Val kanjan - கொடிய கம்ஸன்
மாள,Maala - மாண்டு போம்படி
புரட்டி,Puratti - (அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும்
அ நாள்,A naal - (நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே
எங்கள்,Engal - எங்களுடைய
பூ பட்டு,Poo pattu - அழகிய பட்டுப் புடவைகளை
கொண்ட,Konda - வாரிக் கொண்டு போன
அரட்டன்,Arattan - தீம்பனாயுமுள்ள கண்ணன்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-.