Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 122 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
122ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 5
சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-5-
சேபூண்ட,Seboonda - எருதுகள் கட்டுதற்கு உரிய
சாடு,Sadu - சகடம்
சிதறி,Sithari - (அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை) உருக்குலையும்படி உதைத்து
நெய்க்கு,Neikku - நெய்க்கு ஆசைப்பட்டு
திருடி,Thirudi - களவு செய்து
ஆப்பூண்டு,Aboonda - (உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு (அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க)
நந்தன் மனைவி,Nandan manaivi - நந்தகோபன் தேவியான அவ் யசோதை
கடை தாம்பால்,Kadai thambal - (தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க)
துள்ளித் துடிக்க,Thullith thudikka - துடிக்க துடிக்க
சோப்பூண்டு,Soboonda - அள்ளி மிகவும் துடிக்கும் படி அடியுண்டு
அன்று,Andru - (அதனோடு நல்லாமல்) அக்காலத்தில்
ஆப்பூண்டாள்,Aboondal - (எங்கும் சலிக்கமுடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன்
அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான்