Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 123 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
123ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 6
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு
சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-6
செப்பு,Seppu - ஸ்வர்ண கலசங்கள் போன்ற
இள மெல் முலை,Ila mel mulai - இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய
தேவகி நங்கைக்கு,Devaki nangaiyku - தேவகிப் பிராட்டிக்கு (மகனாக)
சொப்பட தோன்றி,Soppada thondri - நன்றாகப் பிறந்து
தொறுப்பாடியோம்,Thoruppadiyom - ஆய்ப்பாடியிலுள்ளவர்களா கிய நாங்கள்
வைத்த,Vaitha - சேமித்து வைத்த
துப்பமும்,Thuppamum - நெய்யையும்
பாலும்,Palum - பாலையும்
தயிரும்,Thairum - தயிரையும்
விழுங்கிய,Vizhungiya - உட்கொண்ட
அப்பன்,Appan - ஸ்வாமி (உபகாரகன்)
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான்