| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 123 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 6 | செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-6 | செப்பு,Seppu - ஸ்வர்ண கலசங்கள் போன்ற இள மெல் முலை,Ila mel mulai - இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய தேவகி நங்கைக்கு,Devaki nangaiyku - தேவகிப் பிராட்டிக்கு (மகனாக) சொப்பட தோன்றி,Soppada thondri - நன்றாகப் பிறந்து தொறுப்பாடியோம்,Thoruppadiyom - ஆய்ப்பாடியிலுள்ளவர்களா கிய நாங்கள் வைத்த,Vaitha - சேமித்து வைத்த துப்பமும்,Thuppamum - நெய்யையும் பாலும்,Palum - பாலையும் தயிரும்,Thairum - தயிரையும் விழுங்கிய,Vizhungiya - உட்கொண்ட அப்பன்,Appan - ஸ்வாமி (உபகாரகன்) வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான் |