Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 125 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
125ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 8
கொங்கை வன் கூனி சொற் கொண்டு
குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவன் கானடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8
கொங்கை,Kongai - (முதுகில்) முலையெழும்பினாற் போன்ற
வல்,Val - பலிஷ்டமான
கூனி,Kooni - கூனை யுடையளான மந்தரையினுடைய
சொல்,Sol - சொல்லை
கொண்டு,Kondu - அங்கீகரித்து
எங்கும்,Engum - எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்,Kuvalayam thungam - இப் பூமியில் (இருப்பவற்றுள்)
கரியும்,Kariyum - யானைகளையும்
பரியும்,Pariyum - (அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்,Iraachiyamum - ராஜ்யத்தையும்
பரதற்கு,Paratharku - பரதாழ்வானுக்கு
அருளி,Aruli - கொடுத்துவிடல்
வல் கான் அடை,Val kan adai - கொடிய காட்டை அடைந்த
அம் கண்ணன்,Am kannan - அழகிய கண்ணையுடையனான இவன்
அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான்