| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 128 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 1 | அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே இரவுமுண்ணாது உறங்கி நீ போய் இன்றுமுச்சி கொண்டதாலோ வரவும் காணேன் வயிறசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய திரு வுடைய வாய் மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே–2-2-1 | அரவு அணையாய்,Aravu anaiyai - சேஷசாயி யானவனே! ஆயர் ஏறே,Aayar ere - இடையர்களுக்குத் தலைவனே! நீ இரவும் உண்ணாத,Nee iravum unnaadha - நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல் உறங்கிப் போனாய்,Urangip ponaai - உறங்கிப் போய் விட இன்றும்,Indrum - இப் போதும் உச்சி கொண்டது,Uchi kondathu - (பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது; ஆல்,Aal - ஆதலால் அம்மம் உண்ண,Ammam unna - முலை யுண்பதற்கு துயில் எழாய்,Thuyil ezhai - (தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்; வரவும் காணேன்,Varavum kaanen - (நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்! வயிறு அசைத்தாய்,Vayiru asaithai - (உனக்குப் பசியில்லை யென்போமென்றா) வயிறுந்தளர்ந்து நின்றாய்; வன முலைகள்,Vana mulaigal - (எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து) சோர்ந்து பாய,Sornthu paaya - பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க திரு உடைய,Thiru udaiya - அழகை உடைய வாய் மடுத்து,Vai maduthu - (உன்) வாயை வைத்து திளைத்து,Thilaithu - செருக்கி உதைத்து,Uthaithu - கால்களாலே உதைத்துக் கொண்டு பருகிடாய்,Parugidai - முலையுண்பாய். |