திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 129 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
129பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 2
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே முத்தனைய முறுவல் செய்து மூக்குறுஞ்சி முலை யுணாயே–2-2-2
பதவுரை Show / Hide
எம் பிரான்,Em piran - எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்,Vaitha neyyum - உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்,Kaayndha palum - (ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்,Vadi thayirum - (உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்,Naru vennaiyum - மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும்,Ithanaiyum - (ஆகிய) இவை யெல்லாவற்றையும்
நீ பிறந்த பின்னை,Nee pirandha pinnai - நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்,Petru ariyen - கண்டதில்லை;
எத்தனையும்,Ethanaiyum - (நீ) வேண்டினபடி யெல்லாம்
செய்யப் பெற்றாய்,Seyyap petraai - நீ செய்யலாம்;
ஏதும் செய்யேன்,Edhum seyyen - (அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்;
கதம் படாதே,Kadham padaadhe - நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து,Muthu anaiya muruval seydhu - முத்தைப் போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம் பண்ணி
மூக்கு உறிஞ்சி,Mooku urinji - மூக்கை உறிஞ்சிக் கொண்டு
முலை உணாய்,Mulai unai - முலை உண்பாயாக.