| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 129 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 2 | வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே முத்தனைய முறுவல் செய்து மூக்குறுஞ்சி முலை யுணாயே–2-2-2 | எம் பிரான்,Em piran - எமது உபகாரகனே! வைத்த நெய்யும்,Vaitha neyyum - உருக்கி வைத்த நெய்யும் காய்ந்த பாலும்,Kaayndha palum - (ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும் வடி தயிரும்,Vadi thayirum - (உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும் நறு வெண்ணெயும்,Naru vennaiyum - மணம் மிக்க வெண்ணெயும் இத்தனையும்,Ithanaiyum - (ஆகிய) இவை யெல்லாவற்றையும் நீ பிறந்த பின்னை,Nee pirandha pinnai - நீ பிறந்த பிறகு பெற்று அறியேன்,Petru ariyen - கண்டதில்லை; எத்தனையும்,Ethanaiyum - (நீ) வேண்டினபடி யெல்லாம் செய்யப் பெற்றாய்,Seyyap petraai - நீ செய்யலாம்; ஏதும் செய்யேன்,Edhum seyyen - (அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்; கதம் படாதே,Kadham padaadhe - நீ கோபியாதே கொள்; முத்து அனைய முறுவல் செய்து,Muthu anaiya muruval seydhu - முத்தைப் போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம் பண்ணி மூக்கு உறிஞ்சி,Mooku urinji - மூக்கை உறிஞ்சிக் கொண்டு முலை உணாய்,Mulai unai - முலை உண்பாயாக. |