Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 129 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
129ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 2
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறுஞ்சி முலை யுணாயே–2-2-2
எம் பிரான்,Em piran - எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்,Vaitha neyyum - உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்,Kaayndha palum - (ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்,Vadi thayirum - (உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்,Naru vennaiyum - மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும்,Ithanaiyum - (ஆகிய) இவை யெல்லாவற்றையும்
நீ பிறந்த பின்னை,Nee pirandha pinnai - நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்,Petru ariyen - கண்டதில்லை;
எத்தனையும்,Ethanaiyum - (நீ) வேண்டினபடி யெல்லாம்
செய்யப் பெற்றாய்,Seyyap petraai - நீ செய்யலாம்;
ஏதும் செய்யேன்,Edhum seyyen - (அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்;
கதம் படாதே,Kadham padaadhe - நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து,Muthu anaiya muruval seydhu - முத்தைப் போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம் பண்ணி
மூக்கு உறிஞ்சி,Mooku urinji - மூக்கை உறிஞ்சிக் கொண்டு
முலை உணாய்,Mulai unai - முலை உண்பாயாக.