Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 130 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
130ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 3
தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார்
வந்து நன் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உந் திறத்தரல்லர் உன்னை நானொன் றுரப்ப மாட்டேன்
நந்தகோப னணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே–2-2-3
தம் தம் மக்கள்,Tham tham makkal - தங்கள் தங்கள் பிள்ளைகள்
அழுது,Aluthu - அழுது கொண்டு
சென்றால்,Sendral - (தம் தம் வீட்டுக்குப்) போனால்
தாய்மார் ஆவார்,Thaaymar aavaar - (அக்குழந்தைகளின்) தாய்மார்கள்
தரிக்க கில்லார்,Tharikka killar - பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து,Vandhu - (தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து
நன் மேல் பூசல் செய்ய,Nan mel poosal seiyya - உன் மேல் பிணங்க
வாழ வல்ல,Vaazha valla - (அதைக் கண்டு) மகிழ வல்ல
வாசு தேவா,Vasu deva - கண்ண பிரானே!
உந்தையார்,Unthaiyar - உன் தகப்பனார்.
உன் திறத்தர் அல்லர்,Un thirathar allar - உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்;
நான்,Naan - (அபலையான) நானும்
உன்னை,Unnai - (தீம்பில் ..) உன்னை
ஒன்று உரப்ப மாட்டேன்,Ondru urappa matten - சிறிதும் அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்;
நந்த கோபன்,Nanda kopan - (இவையெல்லாங் கிடக்க) நந்த கோபருடைய
அணி சிறுவா,Ani siruvaa - அழகிய சிறு பிள்ளாய்!
நான் சுரந்த முலை,Naan surandha mulai - எனது பால் சுரந்திருக்கிற முலையை
உணாய்,Unai - உண்பாயாக