| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 130 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 3 | தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் வந்து நன் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா உந்தையார் உந் திறத்தரல்லர் உன்னை நானொன் றுரப்ப மாட்டேன் நந்தகோப னணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே–2-2-3 | தம் தம் மக்கள்,Tham tham makkal - தங்கள் தங்கள் பிள்ளைகள் அழுது,Aluthu - அழுது கொண்டு சென்றால்,Sendral - (தம் தம் வீட்டுக்குப்) போனால் தாய்மார் ஆவார்,Thaaymar aavaar - (அக்குழந்தைகளின்) தாய்மார்கள் தரிக்க கில்லார்,Tharikka killar - பொறுக்க மாட்டாதவர்களாய் வந்து,Vandhu - (தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து நன் மேல் பூசல் செய்ய,Nan mel poosal seiyya - உன் மேல் பிணங்க வாழ வல்ல,Vaazha valla - (அதைக் கண்டு) மகிழ வல்ல வாசு தேவா,Vasu deva - கண்ண பிரானே! உந்தையார்,Unthaiyar - உன் தகப்பனார். உன் திறத்தர் அல்லர்,Un thirathar allar - உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்; நான்,Naan - (அபலையான) நானும் உன்னை,Unnai - (தீம்பில் ..) உன்னை ஒன்று உரப்ப மாட்டேன்,Ondru urappa matten - சிறிதும் அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்; நந்த கோபன்,Nanda kopan - (இவையெல்லாங் கிடக்க) நந்த கோபருடைய அணி சிறுவா,Ani siruvaa - அழகிய சிறு பிள்ளாய்! நான் சுரந்த முலை,Naan surandha mulai - எனது பால் சுரந்திருக்கிற முலையை உணாய்,Unai - உண்பாயாக |