திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 130 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
130பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 3
தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் வந்து நன் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா உந்தையார் உந் திறத்தரல்லர் உன்னை நானொன் றுரப்ப மாட்டேன் நந்தகோப னணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே–2-2-3
பதவுரை Show / Hide
தம் தம் மக்கள்,Tham tham makkal - தங்கள் தங்கள் பிள்ளைகள்
அழுது,Aluthu - அழுது கொண்டு
சென்றால்,Sendral - (தம் தம் வீட்டுக்குப்) போனால்
தாய்மார் ஆவார்,Thaaymar aavaar - (அக்குழந்தைகளின்) தாய்மார்கள்
தரிக்க கில்லார்,Tharikka killar - பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து,Vandhu - (தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து
நன் மேல் பூசல் செய்ய,Nan mel poosal seiyya - உன் மேல் பிணங்க
வாழ வல்ல,Vaazha valla - (அதைக் கண்டு) மகிழ வல்ல
வாசு தேவா,Vasu deva - கண்ண பிரானே!
உந்தையார்,Unthaiyar - உன் தகப்பனார்.
உன் திறத்தர் அல்லர்,Un thirathar allar - உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்;
நான்,Naan - (அபலையான) நானும்
உன்னை,Unnai - (தீம்பில் ..) உன்னை
ஒன்று உரப்ப மாட்டேன்,Ondru urappa matten - சிறிதும் அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்;
நந்த கோபன்,Nanda kopan - (இவையெல்லாங் கிடக்க) நந்த கோபருடைய
அணி சிறுவா,Ani siruvaa - அழகிய சிறு பிள்ளாய்!
நான் சுரந்த முலை,Naan surandha mulai - எனது பால் சுரந்திருக்கிற முலையை
உணாய்,Unai - உண்பாயாக