| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 131 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 4 | கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய பஞ்சி யன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடுமென்று அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்தள வன்றாலோ கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை யுணாயே–2-2-4 | அமரர் கோவே,Amarar kove - தேவர்களுக்குத் தலைவனே! (நீ) கஞ்சன் தன்னால்,Kanjan thannal - கம்ஸனாலே புணர்க்கப்பட்ட,Punarppatta - (உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட கள்ளச் சகடு,Kallas sakadu - க்ருத்ரிம சகடமானது கலக்கு அழிய,Kalakku azhiya - கட்டு (க்குலைந்து உருமாறி) அழிந்து போம்படி பஞ்சி அன்ன மெல் அடியால்,Panji anna mel adiyal - பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால் பாய்ந்த போது,Paindha pothu - உதைத்த போது நொந்திடும் என்று,Nondhidum endru - (உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று அஞ்சினேன் காண்,Anjinen kaan - பயப்பட்டேன் காண்; ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்,Aayar kootathu alavu andru aal - (என்னுடைய அச்சம்) இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அள்வல்ல காண்; கஞ்சனை,Kanjanai - (உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை உன் வஞ்சனையால்,Un vanjanaiyal - உன்னுடைய வஞ்சனையினாலே வலைப்படுத்தாய்,Valaipaduthai - (உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே! முலை உணாய்.,Mulai unai - முலை உண்பாயாக. |