| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 133 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 6 | மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலை யுணாயே–2-2-6 | மின் அனைய,Min anaiya - மின்னலை யொத்த நுண்,Nun - ஸூக்ஷ்மமான இடையார்,Idaiyar - இடையை யுடைய பெண்களின் விரி குழல் மேல்,Viri kuzhal mel - விரிந்த (பரந்த) கூந்தலின் மேல் நுழைந்த,Nuzhaindha - (தேனை உண்ணப்) புகுந்த வண்டு,Vandu - வண்டுகள் இன் இசைக்கும்,In isaiyum - (தேனை யுண்டு களித்து) இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற வில்லிபுத்தூர்,Villiputhur - ஸ்ரீவில்லிபுத்தூரிலே இனிது,Inidhu - போக்யமாக அமர்ந்தாய்,Amarnthai - எழுந்தருளி யிருப்பவனே! உன்னை கண்டார்,Unnai kandar - உன்னைப் பார்த்தவர் இவனை பெற்ற வயிறு உடையாள்,Ivanai petra vayiru udaiyaal - இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள் என்ன நோன்பு நோற்றாள் கொலோ,Enna nonbu notraal kolo - என்ன தபஸ்ஸு பண்ணினாளோ! என்னும்,Ennum - என்று கொண்டாடிச் சொல்லுகிற வார்த்தை,Varthai - வார்த்தையை எய்துவித்த,Eythuvitha - (எனக்கு) உண்டாக்கின இருடீகேசா,Irudheekesa - ஹ்ருஷீகேசனே! முலை உணாய்.,Mulai unai - முலை உண்பாயாக. |