| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 134 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 7 | பெண்டிர் வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுது மென்னு மாசையாலே கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டி கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7 | கண்டவர்கள்,Kandavargal - (உன்னைப்) பார்த்தவர்களான பெண்டிர் வாழ்வார்,Pendir vaalvar - (தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள் நன் ஒப்பாரை,Nan opparai - உன்னைப் போன்ற குழந்தைகளை பெறுதும்,Peruthum - பெறுவோம் (பெற வேணும்) என்னும்,Ennum - என்கிற ஆசையாலே,Aasaiyale - ஆசையினாலே போக்கு ஒழிந்தார்,Pokku ozhindar - (உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்; வண்டு உலாம்,Vandu ulaam - வண்டுகள் ஸஞ்சரிக்கிற பூ,Poo - புஷ்பங்களை யணிந்த குழலினார்,Kuzhalinar - கூந்தலை யுடையவர்கள் கண் இணையால்,Kan inaiyaal - (தமது) இரண்டு கண்களினாலும் கலக்க நோக்கி,Kalakka nokki - (உனது) திருமேனி முழுவதும் பார்த்து உன்,Un - உன்னுடைய வாய் அமுதம்,Vai amudham - அதராம்ருதத்தை உண்ண வேண்டி,Unna vendi - பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய் கொண்டு போவான்,Kondu povaan - (உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு வந்து நன்றார்,Vandhu nandrar - வந்து நிற்கிறார்கள்; கோவிந்தா,Govinda - கோவிந்தனே! நீ முலை உணாய்.,Nee mulai unai - நீ முலை உணாய். |