Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 134 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
134ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 7
பெண்டிர் வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுது மென்னு மாசையாலே
கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7
கண்டவர்கள்,Kandavargal - (உன்னைப்) பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார்,Pendir vaalvar - (தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்
நன் ஒப்பாரை,Nan opparai - உன்னைப் போன்ற குழந்தைகளை
பெறுதும்,Peruthum - பெறுவோம் (பெற வேணும்)
என்னும்,Ennum - என்கிற
ஆசையாலே,Aasaiyale - ஆசையினாலே
போக்கு ஒழிந்தார்,Pokku ozhindar - (உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்;
வண்டு உலாம்,Vandu ulaam - வண்டுகள் ஸஞ்சரிக்கிற
பூ,Poo - புஷ்பங்களை யணிந்த
குழலினார்,Kuzhalinar - கூந்தலை யுடையவர்கள்
கண் இணையால்,Kan inaiyaal - (தமது) இரண்டு கண்களினாலும்
கலக்க நோக்கி,Kalakka nokki - (உனது) திருமேனி முழுவதும் பார்த்து
உன்,Un - உன்னுடைய
வாய் அமுதம்,Vai amudham - அதராம்ருதத்தை
உண்ண வேண்டி,Unna vendi - பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான்,Kondu povaan - (உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு
வந்து நன்றார்,Vandhu nandrar - வந்து நிற்கிறார்கள்;
கோவிந்தா,Govinda - கோவிந்தனே!
நீ முலை உணாய்.,Nee mulai unai - நீ முலை உணாய்.