Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 135 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
135ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 8
இருமலை போலெதிர்ந்த மல்லர் இரு வரங்கம் எரி செய்தாய் உன்
திருமலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என்னல்குலேறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே–2-2-8
இரு மலை போல்,Iru malai pol - இரண்டு மலை போலே (வந்து)
எதிர்ந்த,Ethirntha - எதிர்த்து நின்ற
மல்லர் இருவர்,Mallar iruvar - (சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய
அங்கம்,Angam - உடம்பை
எரி செய்தாய்,Eri seithai - (பயத்தாலே) எரியும்படி செய்தவனே!
வந்து,Vandhu - (நீ) வந்து
என் அல்குல் ஏறி,En alkul eri - என் மடிமீது ஏறிக் கொண்டு
உன்,Un - உன்னுடைய
திரு மலிந்து திகழும் மார்வு,Thiru malindhu thigazhum maarvu - அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது
தேக்க,Thekka - (முலைப் பாலால்) நிறையும்படி
ஒரு முலையை,Oru mulaiai - ஒரு முலையை
வாய் மடுத்து,Vai maduthu - வாயிலே வைத்துக் கொண்டு
ஒரு முலையை,Oru mulaiai - மற்றொரு முலையை
நெருடிக் கொண்டு,Nerudik kondu - (கையினாலே) நெருடிக் கொண்டிருந்து
ஏங்கி ஏங்கி,Engi engi - (மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்) இளைத்திளைத்து
இரு முலையும்,Iru mulaigal - (இப்படி) இரண்டு முலையையும்
முறை முறை ஆய்,Murai murai aai - மாறி மாறி
இருந்து,Irundhu - பொருந்தியிருந்து
உணாய்,Unai - உண்பாயாக.