| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 135 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 8 | இருமலை போலெதிர்ந்த மல்லர் இரு வரங்கம் எரி செய்தாய் உன் திருமலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என்னல்குலேறி ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே–2-2-8 | இரு மலை போல்,Iru malai pol - இரண்டு மலை போலே (வந்து) எதிர்ந்த,Ethirntha - எதிர்த்து நின்ற மல்லர் இருவர்,Mallar iruvar - (சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய அங்கம்,Angam - உடம்பை எரி செய்தாய்,Eri seithai - (பயத்தாலே) எரியும்படி செய்தவனே! வந்து,Vandhu - (நீ) வந்து என் அல்குல் ஏறி,En alkul eri - என் மடிமீது ஏறிக் கொண்டு உன்,Un - உன்னுடைய திரு மலிந்து திகழும் மார்வு,Thiru malindhu thigazhum maarvu - அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது தேக்க,Thekka - (முலைப் பாலால்) நிறையும்படி ஒரு முலையை,Oru mulaiai - ஒரு முலையை வாய் மடுத்து,Vai maduthu - வாயிலே வைத்துக் கொண்டு ஒரு முலையை,Oru mulaiai - மற்றொரு முலையை நெருடிக் கொண்டு,Nerudik kondu - (கையினாலே) நெருடிக் கொண்டிருந்து ஏங்கி ஏங்கி,Engi engi - (மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்) இளைத்திளைத்து இரு முலையும்,Iru mulaigal - (இப்படி) இரண்டு முலையையும் முறை முறை ஆய்,Murai murai aai - மாறி மாறி இருந்து,Irundhu - பொருந்தியிருந்து உணாய்,Unai - உண்பாயாக. |