| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 136 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 9 | அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினாற்போல் செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கமெல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம அங்கமரர்க் கமுதளித்த அமரர் கோவே முலையுணாயே–2-2-9 | அம்ம,Amma - தலைவனே! அங்கு,Angu - (அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த) அக் காலத்திலே விம்ம,Vimm - (அவர்கள் வயிறு) நிரம்பும்படி அமரர்க்கு,Amararkku - (அந்த) தேவர்களுக்கு அமுது அளித்த,Amudhu alitha - (க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த அமரர் கோவே,Amarar kove - தேவாதிராஜனே! அம் கமலம் போது அகத்தில்,Am kamalam podhu agathil - அழகிய தாமரைப் பூவினுள்ளே அணி கொள் முத்தம் சிந்தினால் போல்,Ani kol mutham sindhinal pol - அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி செம் கமலம் முகம்,Sem kamalam mugam - செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது வியர்ப்ப,Viyarpa - வியர்த்துப் போக இ முற்றத்தூடே,I mutraththude - இந்த முற்றத்திலேயே தீமை செய்து,Theemai seithu - தீம்பைச் செய்து கொண்டு அங்கம் எல்லாம் புழுதி ஆக,Angam ellam puzhudhi aga - உடம்பெல்லாம் புழுதி படியும்படி அளைய வேண்டா,Alaiya venda - புழுதி யளையாதே; முலை உணாய்,Mulai unai - முலை யுண்ண வாராய். |