| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 137 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 10 | ஓட வோடக் கிங்கிணிகள் ஒலிக்கு மோசைப் பாணியாலே பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன் ஆடி யாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தை யாடி ஓடி யோடிப் போய் விடாதே உத்தமா நீ முலையுணாயே–2-2-10 | ஓடஓட,Odaoda - (குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால் ஒலிக்கும்,Olikkum - சப்திக்கின்ற கிண் கிணிகள்,Kin kinigal - பாதச் சதங்கைகளினுடைய ஓசைப் பாணியாலே,Osai paaniyale - ஓசையாகிற சப்தத்தால் பாடிப் பாடி,Paadi paadi - இடைவிடாது பாடிக் கொண்டு அதனுக்கு ஏற்ற கூத்தை,Athanukku etra koothai - அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை அசைந்து அசைந்திட்டு,Asaindhu asaindhittu - வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து ஆடி ஆடி,Aadi aadi - ஆடிக் கொண்டு வருகின்றாயை,Varugindraiyai - வருகின்ற உன்னை பற்பநாபன் என்று இருந்தேன்,Parpanapan endru irundhen - (வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்; நீ,Nee - நீ ஆடி,Aadi - ஆடிக்கொண்டே ஓடிஓடிபோய் விடாதே,Odi odipoi vidaathe - (என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே முலை உணாய்.,Mulai unai - முலை உணாய். |