| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 138 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 11 | வாரணிந்த கொங்கை யாய்ச்சி மாதவா உண் ணென்ற மாற்றம் நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர் பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே–2-2-11 | வார் அணிந்த,Vaar anintha - கச்சை அணிந்து கொண்டிருக்கிற கொங்கை,Kongai - ஸ்தநங்களையுடைய ஆய்ச்சி,Aaychi - யசோதை மாதவா,Maadhavaa - மாதவனே! உண்,Un - முலையை (உண்பாயாக) என்ற,Endru - என்று (வேண்டிச்) சொன்ன மாற்றம்,Maatram - வார்த்தையைக் குறித்தனவான நீர் அணிந்த குவளை,Neer anintha kuvalai - நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின் வாசம்,Vaasam - நல்ல வாசனை நிகழ நாறும்,Nigazha naarum - ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற வில்லிபுத்தூர்,Villiputhur - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும் பார் அணிந்த,Paar anintha - பூமி முழுவதும் அழகாகப் பரவிய தொல் புகழான்,Thol pugazhaan - பழமையான கீர்த்தியை யுடையவருமான பட்டர்பிரான்,Pattaripiraan - பெரியாழ்வார் அருளிச் செய்த பாடல்,Paadal - பாசுரங்களை வல்லார்,Vallar - ஓத வல்லவர் சீர் அணிந்த,Seer anintha - குணங்களாலழகிய செம் கண் மால் மேல்,Sem kan maal mel - சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில் சென்ற,Sendra - பதிந்த சிந்தை,Sindhai - மநஸ்ஸை பெறுவர்,Peruvaar - அடைவார்கள் |