திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 138 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
138பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 11
வாரணிந்த கொங்கை யாய்ச்சி மாதவா உண் ணென்ற மாற்றம் நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர் பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே–2-2-11
பதவுரை Show / Hide
வார் அணிந்த,Vaar anintha - கச்சை அணிந்து கொண்டிருக்கிற
கொங்கை,Kongai - ஸ்தநங்களையுடைய
ஆய்ச்சி,Aaychi - யசோதை
மாதவா,Maadhavaa - மாதவனே!
உண்,Un - முலையை (உண்பாயாக)
என்ற,Endru - என்று (வேண்டிச்) சொன்ன
மாற்றம்,Maatram - வார்த்தையைக் குறித்தனவான
நீர் அணிந்த குவளை,Neer anintha kuvalai - நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின்
வாசம்,Vaasam - நல்ல வாசனை
நிகழ நாறும்,Nigazha naarum - ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
வில்லிபுத்தூர்,Villiputhur - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும்
பார் அணிந்த,Paar anintha - பூமி முழுவதும் அழகாகப் பரவிய
தொல் புகழான்,Thol pugazhaan - பழமையான கீர்த்தியை யுடையவருமான
பட்டர்பிரான்,Pattaripiraan - பெரியாழ்வார் அருளிச் செய்த
பாடல்,Paadal - பாசுரங்களை
வல்லார்,Vallar - ஓத வல்லவர்
சீர் அணிந்த,Seer anintha - குணங்களாலழகிய
செம் கண் மால் மேல்,Sem kan maal mel - சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில்
சென்ற,Sendra - பதிந்த
சிந்தை,Sindhai - மநஸ்ஸை
பெறுவர்,Peruvaar - அடைவார்கள்