| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 14 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (இவ்வளவிலே யன்றி தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த திருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே ஸ்லாகிக்கிறார்) 2 | ஓடுவார் விழு வார் உகந் தாலிப்பார் நாடுவார் நம்பி ரான் எங்குற் றானென்பார் பாடு வார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே.–1-1-2 | ஆய்ப்பாடி,Aayppadi - திருவாய்ப்பாடியானது, ஓடுவார்,Oduvaar - (ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும் விழுவார்,Vizhuvaar - (சேற்றிலே வழுக்கி) விழுவாரும் உகந்து,Ugandhu - உகப்புக்குப் போக்குவீடாக ஆலிப்பார்,Aalipaar - கோஷிப்பாரும் நாடுவார்,Naaduvaar - (பிள்ளையைத்) தேடுவாரும் நம் பிரான்,Nam piraan - நமக்கு உபகாரகனான கண்ணன் எங்கு தான் என்பார்,Engu thaan enbaar - எங்கேதான் (இராநின்றான்) என்பாரும் பாடுவார்களும்,Paaduvaargalum - பாடுவார்களும் பல் பறை,Pal parai - பலவகை வாத்யங்கள் கொட்ட,Kotta - முழங்க நின்று,Nindru - அதற்குப் பொருந்த நின்று ஆடுவார்களும்,Aaduvaargalum - கூத்தாடுவாருமாக ஆயிற்று,Aayitru - ஆய்விட்டது. |