Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 140 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
140ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 2
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா–2-3-2
நண்ணி தொழுமவர்,Nanni Thozhumavar - கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை,Sindhai - மநஸ்ஸில் நின்றும்
பிரியாத,Priyaadha - விட்டு நீங்காத
நாராயணா,Narayana - நாராயணனே!
வண்ணம்,Vannam - (நீ) (மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்,Pavalam - பவழ வடத்தை
மருங்கினில்,Marunginil - திருவரையிலே
சாத்தி,Saathi - சாத்திக் கொண்டு
மலர்,Malar - தாமரை மலர் போன்ற
பாதம்,Paadham - பாதங்களிலணிந்த
கிண் கிணி,Kin Kini - சதங்கை
ஆர்ப்ப,Aarpa - ஒலிக்கும்படி
இங்கே வாராய்,Inge Vaarai - (நீ) இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே,Ennarukku Ariya Piraane - (உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு) நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை,Thiriyai - நூல் திரியை
எரியாமே,Eriyaame - எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு,Kaadhukku - (உன்) காதுகளுக்கு
இடுவன்,Iduvan - இடுவேன்;
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய,Kannukku Nindrum Azhagu Udaiya - (அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான) கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்,Kanagam Kadippum - பொற் கடிப்பும்
இவை,Ivai - இவையாகும்;
ஆ,Aa - ஆச்சர்யம்.