Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 145 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
145ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 7
முலை யேதும் வேண்டேனென் றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை யொன்று இறுத்தாய் திரி விக்கிரமா திரு வாயர் பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே–2-3-7
முலை,Mulai - ‘முலையையும்
ஏதும்,Edhum - (மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்,Venden - (நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி,Endru Odi - என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை,Nin Kaadhil Kadippai - (நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு,Pariththu Erindhittu - பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை,Malaiyai - கோவர்த்தன மலையை
எடுத்து,Eduthu - (குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து,Magizhndhu - திருவுள்ளமுகந்து
கல் மாரி,Kal Maari - கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து,Kaathu - (இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை,Pasu Nirai - பசுக்களின் திரளை
மேய்த்தாய்,Meythaai - மேய்த்தவனே!
ஒன்று சிலை,Ondru Silai - ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்,Muriththai - (பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா,Thirivikramaa - த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி,Thiru Aayarpadi - திரு வாய்ப்பாடிக்கு
பிரானே,Piraane - உபகாரகனே!
தலை நிலா போதே,Thalai Nila Poadhe - தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது,Un Kaadhai Perukkaadhu - உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்,Vittitten - விட்டு வைத்தேன்;
குற்றமே அன்றே,Kutrame Andre - (அப்படி விட்டு வைத்தது) என்னுடைய அபராதமன்றோ?