Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 149 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
149ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 11
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்–2-3-11
குளிர,Kulira - மனங்குளிரும்படி
கண்ணை,Kannai - (உன்) கண்ணை
கலந்து,Kalandhu - (இடைப் பெண்களுடைய கண்களோடு) சேர்த்து,
எங்கும்,Engum - (அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி,Nookki - பார்த்து,
கடி கமழ்,Kadi Kamazh - வாஸனை வீசுகின்ற
பூ,Poo - புஷ்பங்களணிந்த
குழலார்கள்,Kuzhalaarkal - கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்,Ennaththul - மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து,Endrum Irundhu - எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்,Thithikkum - ரஸிக்கின்ற
பெருமானே,Perumaane - பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே,Engal Amudhe - எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண,Unna - தின்பதற்கு
கனிகள்,Kanigal - (நாவல் முதலிய) பழங்களை
தருவன்,Tharuvaan - கொடுப்பேன்
கடிப்பு,Kadippu - காதணியை
ஒன்றும் நோவாமே,Ondrum Novamae - சிறிதும் நோவாதபடி
காதுக்கு,Kaadhukku - (உன்னுடைய) காதிலே
இடுவன்,Iduvan - இடுவேன்
சகடம்,Sakadam - (அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட,Pannai Kizhiyuthaiththitta - கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா,Pathmanabha - பத்மநாபனே
இங்கே வாராய்,Inge Vaarai - இங்கே வாராய்