| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 149 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 11 | கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங் குழலார்கள் எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன் பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்–2-3-11 | குளிர,Kulira - மனங்குளிரும்படி கண்ணை,Kannai - (உன்) கண்ணை கலந்து,Kalandhu - (இடைப் பெண்களுடைய கண்களோடு) சேர்த்து, எங்கும்,Engum - (அவர்களுடைய) வடிவம் முழுவதும் நோக்கி,Nookki - பார்த்து, கடி கமழ்,Kadi Kamazh - வாஸனை வீசுகின்ற பூ,Poo - புஷ்பங்களணிந்த குழலார்கள்,Kuzhalaarkal - கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய எண்ணத்துள்,Ennaththul - மநஸ்ஸினுள்ளே என்றும் இருந்து,Endrum Irundhu - எப்போது மிருந்து கொண்டு தித்திக்கும்,Thithikkum - ரஸிக்கின்ற பெருமானே,Perumaane - பெருமையை யுடையவனே1 எங்கள் அமுதே,Engal Amudhe - எங்களுக்கு அமுருதம் போன்றவனே’ உண்ண,Unna - தின்பதற்கு கனிகள்,Kanigal - (நாவல் முதலிய) பழங்களை தருவன்,Tharuvaan - கொடுப்பேன் கடிப்பு,Kadippu - காதணியை ஒன்றும் நோவாமே,Ondrum Novamae - சிறிதும் நோவாதபடி காதுக்கு,Kaadhukku - (உன்னுடைய) காதிலே இடுவன்,Iduvan - இடுவேன் சகடம்,Sakadam - (அஸுராவிஷ்டமாகா) சகடத்தை பண்ணை கிழிய உதைத்திட்ட,Pannai Kizhiyuthaiththitta - கட்டுக் குலையும்படி உதைத்தருளின பத்மநாபா,Pathmanabha - பத்மநாபனே இங்கே வாராய்,Inge Vaarai - இங்கே வாராய் |