| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 15 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 3 | பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார் ஆணொப் பார் இவன் நேரில்லை காண் திரு வோணத் தானுலகாளு மென் பார்களே.–1-1-3 | சீர் உடை,Seer udai - ஸ்ரீமானான பிள்ளை,Pillai - க்ருஷ்ணன் பேணி,Peni - (கம்ஸாதிகள் கண்படாதபடி தன்னைக்) காத்து வந்து பிறந்தினில்,Pirandhinil - பிறந்தவளவில் தாம்,Thaam - ஆடிப்பாடி ஆயர்கள் காண,Kaana - (கண்ணனைக்) காண்கைக்காக புகுவார்,Puguvaar - உள்ளே நுழைவாரும் புக்கு,Pukku - உள்ளேபோய் (கண்டு) போதுவார்,Poduvaar - வெளிப்புறப்படுவாரும், ஆண் ஒப்பார்,Aan oppaar - ஆண்தன்மையொத்திருப்பவர்களில் இவன் நேர்,Ivan ner - இவனோடு ஒத்திருப்பார் இல்லை,Illai - (யாரும்) இல்லை; (இவன்) திரு ஓணத்தான்,Thiru onathaan - ச்ரவண நக்ஷரத்தில் அவதரித்த ஸர்வேச்வரனுடைய உலகு,Ulagu - விபூதிகளையெல்லாம் ஆளும்,Aalum - ஆளக்கடவன் என்பார்கள்,Enbaarghal - என்று சொல்லுவாருமாக ஆனார்கள். |