Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 15 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
15ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 3
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார் இவன் நேரில்லை காண் திரு
வோணத் தானுலகாளு மென் பார்களே.–1-1-3
சீர் உடை,Seer udai - ஸ்ரீமானான
பிள்ளை,Pillai - க்ருஷ்ணன்
பேணி,Peni - (கம்ஸாதிகள் கண்படாதபடி தன்னைக்) காத்து வந்து
பிறந்தினில்,Pirandhinil - பிறந்தவளவில்
தாம்,Thaam - ஆடிப்பாடி ஆயர்கள்
காண,Kaana - (கண்ணனைக்) காண்கைக்காக
புகுவார்,Puguvaar - உள்ளே நுழைவாரும்
புக்கு,Pukku - உள்ளேபோய் (கண்டு)
போதுவார்,Poduvaar - வெளிப்புறப்படுவாரும்,
ஆண் ஒப்பார்,Aan oppaar - ஆண்தன்மையொத்திருப்பவர்களில்
இவன் நேர்,Ivan ner - இவனோடு ஒத்திருப்பார்
இல்லை,Illai - (யாரும்) இல்லை; (இவன்)
திரு ஓணத்தான்,Thiru onathaan - ச்ரவண நக்ஷரத்தில் அவதரித்த ஸர்வேச்வரனுடைய
உலகு,Ulagu - விபூதிகளையெல்லாம்
ஆளும்,Aalum - ஆளக்கடவன்
என்பார்கள்,Enbaarghal - என்று சொல்லுவாருமாக ஆனார்கள்.