திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 150 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
150பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 12
வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன் நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச் சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்–2-3-12
பதவுரை Show / Hide
வா என்று சொல்லி,Vaa Endru Solli - (கண்ணன் யசோதையைப் பார்த்து) ‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து,En Kaiyai Pidiththu - என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்,Kaadhil - காதிலே
நோவ,Nova - நோம்படி
கடிப்பை,Kadippai - காதணியை
இங்கு,Ingu - இப்போது
வலியவே,Valiyave - பலாத்காரமாக
தரிக்கில்,Tharikkil - இட்டால்
உனக்கு,Unakku - உனக்கு
இழுக்கு உற்ற(து) என்,Ilukku Utthru En - சேதமுண்டானதென்ன?
காதுகள்,Kaadhugal - (என்) காதுகள்
நொந்திடும்,Nondhidum - நோவெடுக்கும்
கில்லேன்,Killean - (அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன் (என்று மறுத்துச் சொல்ல)
நம்பீ,Nambi - யசோதை சொல்லுகிறாள்-) பூர்ணனே
நாவல் பழம்,Naaval Pazham - (உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்,Kondu Vaiththaan - கொண்டு வைத்திருக்கிறேன்
இவை,Ivai - இவற்றை
காணாய்,Kaanai - பார்ப்பாயாக
முன்,Mun - முன்பு
வஞ்சம் மகள்,Vancham Magal - வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ,Saava - மாளும்படி
பால்,Paal - (அவளது) முலைப் பாலை
உண்டு,,Undu - பாநம் பண்ணி,
சகடு,Sakadu - சகடாஸுரன்
இற,Ira - முறியும்படி
பாய்ந்திட்ட,Paandhitta - (கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய்,Thaamodhara Inge Vaarai - தாமோதரா’ இங்கே வாராய்