| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 151 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 13 | வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13 | அசோதை,Ashodai - யசேதையானவள் வார்,Vaar - (ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற காது,Kaadhu - காதுகளை தாழ,Thaazha - தொங்கும்படி பெருக்கி,Perukki - வளர்த்து அமைத்து,Amaiththu - ஓரளவிலே நிற்கும்படி செய்து மகரம் குழை இட வேண்டி,Magaram Kuzhai Idu Vendi - மகர குண்டங்களை இடவிரும்பி திருமாலை,Thirumalai - ச்ரிய பதியான கண்ணனை சீரால் சொன்ன,Seeraal Sona - சிறப்புக் குறையாதபடி அழைத்த சொல்,Soll - சொற்கள் சிந்தையுள்,Sindhaiyul - (தம்முடைய) மநஸ்ஸிலே நின்று,Nindru - நிலையாகப் பொருந்தி திகழ,Thigazha - விளங்க, பார் ஆர் தொல் புகழான்,Paar Aar Thol Pugazhaan - பூமியில் நிரம்பிய வழமையான யசஸ்ஸையுடையவரும் புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மன்னன்,Mannan - நிர்வாஹகருமான’ பெரியாழ்வார் பன்னிரு நாமத்தால் சொன்ன,Panniru Naamaththaal Sona - த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த ஆராத,Aaraadha - (ஓத ஓத) த்ருப்தி பிறவாத அந்தாதி,Andhaadi - அந்தாதித் தொடையினாலாகிய பன்னிரண்டும்,Pannirandum - பன்னிரண்டு பாட்டுக்களையும் வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் அச்சுதனுக்கு,Achuthanukku - எம்பெருமானுக்கு அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவர். |